India
Delhi Riots : 903 பேர் கைது; 254 பேர் மீது FIR பதிவு... பா.ஜ.கவினரை இதுவரை தொடாத டெல்லி போலிஸ்!
டெல்லியின் ஷாஹீன்பாக்கை தொடர்ந்து வடகிழக்கு பகுதியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் அறவழியில் தங்களது போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது, பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் வன்முறையை தூண்டும் பேச்சால் அங்கு கலவரம் வெடித்தது.
ஆனால், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை திடீரென உண்டாகவில்லை என்றும், இந்துத்வா கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாகவும் அம்பலமானது. இந்த வன்முறையில் 45 பேர் பலியாகியும், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 903 பேரை கைது செய்துள்ள டெல்லி போலிஸ், 254 பேர் மீது FIR நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பா.ஜ.கவின் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா, ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது எவ்வித நடவடிக்கையும், முதல் தகவல் அறிக்கைக் கூட பதியாமல் உள்ளது டெல்லி காவல்துறை.
Also Read
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!
-
3.5 லட்ச அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்காக.. காலை உணவு திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைக்கும் முதல்வர்!
-
ஒன்றிய அரசின் கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்: இரகுமான் கான் நூல்கள் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் சூளுரை!