India
Delhi Riots : 903 பேர் கைது; 254 பேர் மீது FIR பதிவு... பா.ஜ.கவினரை இதுவரை தொடாத டெல்லி போலிஸ்!
டெல்லியின் ஷாஹீன்பாக்கை தொடர்ந்து வடகிழக்கு பகுதியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் அறவழியில் தங்களது போராட்டங்களை நடத்தி வந்தனர். அப்போது, பா.ஜ.கவின் கபில் மிஸ்ரா, அனுராக் தாகூர் உள்ளிட்டோரின் வன்முறையை தூண்டும் பேச்சால் அங்கு கலவரம் வெடித்தது.
ஆனால், வடகிழக்கு டெல்லியில் நடைபெற்ற வன்முறை திடீரென உண்டாகவில்லை என்றும், இந்துத்வா கும்பல் திட்டமிட்டு அரங்கேற்றியிருப்பதாகவும் அம்பலமானது. இந்த வன்முறையில் 45 பேர் பலியாகியும், நூற்றுக்கணக்கானோர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை உயரக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கின் அடிப்படையில், டெல்லியில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை 903 பேரை கைது செய்துள்ள டெல்லி போலிஸ், 254 பேர் மீது FIR நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. மேலும், கைது நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசிய பா.ஜ.கவின் அனுராக் தாகூர், கபில் மிஸ்ரா, ப்ரவேஷ் வர்மா, அபய் வர்மா உள்ளிட்டோர் மீது எவ்வித நடவடிக்கையும், முதல் தகவல் அறிக்கைக் கூட பதியாமல் உள்ளது டெல்லி காவல்துறை.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !