India
“திணறிவரும் இந்திய பொருளாதாரம் : 3வது காலாண்டிலும் ஜி.டி.பி 4.7% தான்” : மோடி ஆட்சியால் மக்கள் வேதனை!
இந்தியப் பொருளாதாரம், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக மோசமான பாதிப்புகளை கடந்த ஒரு வருடமாக சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சி 5.1 சதவீதமாக மட்டுமே உள்ளது.
இந்நிலையில், மத்திய புள்ளியியல் அலுவலகம் ஜி.டி.பி புள்ளி விவரங்களை நேற்று வெளியிட்டுள்ளது. அதில், இந்திய பொருளாதாரம் 2019 அக்டோபர் - டிசம்பர் வரையான 3வது காலாண்டில் 4.7 சதவீதமாக இருப்பதாக அரசு தகவல் அளித்துள்ளது.
அதுமட்டுமின்றி, ஜனவரியில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, உர வகைகளின் உற்பத்தி சுருங்கிவிட்டதாகவும், வேளாண்மை, கட்டுமானம், உற்பத்தி ஆகிய துறைகளில் எந்த குறிப்பிட்ட முன்னேற்றமும் மூன்றாவது காலாண்டில் உண்டாகவில்லை என அரசு தகவல் அளித்துள்ளது.
கடந்த காலாண்டைவிட ஓரளவு அதிகரித்தாலும் அடுத்துவரும் நான்காவது காலாண்டின் 4.7 சதவீதம் என்பது இன்னும் குறையும் என கூறப்படுகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் பரவலால் உலக நாடுகளில் உண்டாகியுள்ள பொருளாதார சரிவுகள் ஏற்படுத்திய தாக்கங்கள் கடைசி காலாண்டில் எதிரொலிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் 2019-2020ம் நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக அதிகரிக்கும் எனக் கூறிய மோடி அரசின் விருப்பம் நிறைவேறுவது சாத்தியமில்லாததே எனக் கூறப்படுகிறது.
Also Read
-
“பாவம், இந்தி பேசும் மக்களை ஏமாற்றலாம்.. ஆனால் தமிழ்நாட்டு மக்களை..” -பாஜகவை வெளுத்து வாங்கிய தயாநிதி MP!
-
உலக மனித உரிமைகள் நாள் : சுயமரியாதையைப் பாதுகாத்திட உறுதி ஏற்போம்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வெல்லும் தமிழ்ப் பெண்கள் : மகளிர் உரிமைத் திட்டத்தின் 2-வது கட்ட விரிவாக்கம்.. எப்போது தொடக்கம்? -விவரம்!
-
4 ஆண்டுகள் - ரூ.8,230.55 கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்பு : இந்து சமய அறநிலையத்துறை அதிரடி!
-
மதுரை கோவைக்கு மெட்ரோ ரயில் புறக்கணிப்பு ஏன்? : மாநிலங்களவையில் கேள்வி எழுப்பிய கனிமொழி NVN சோமு MP!