India
ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிடில் செயலிழப்பு - கடைசி கெடு விதித்து மத்திய அரசு எச்சரிக்கை!
வரி ஏய்ப்பை தடுக்கும் நோக்கில், ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் அறிவித்தது.
பின்னர், இதற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதுவரை, 30 கோடியே 75 லட்சம் பான் கார்டுகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆதார் எண்ணுடன் இணைக்காத பான் கார்டுகளின் எண்ணிக்கை 17 கோடியே 58 லட்சமாக உள்ளது.
ஆகையால், வருகிற மார்ச் 31ஆம் தேதிக்குள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடைசி கெடு விதித்திருக்கிறது. அவ்வாறு இணைக்காத பான் கார்டுகள், வருமானவரி சட்டத்தின் மூலம், மார்ச் 31க்கு பிறகு உடனடியாக செயலற்றதாக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
பான் கார்டு இல்லாதவர்கள் ஆன்லைன் மூலம் உடனடியாக பெறும் அம்சத்தை வருமான வரித்துறை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஏற்கெனவே வைத்திருந்த பான் கார்டு தொலைந்து போனாலோ, சேதமடைந்துவிட்டாலோ அதனை இந்த வசதியின் மூலம் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!