India
கொரோனா எதிரொலி : சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை - மத்திய அரசு அறிவிப்பு!
சீனாவில் 'கொரோனா' வைரஸ் வெகுவேகமாகப் பரவி வருவதால் இதுவரை 810 பேர் பலியாகியுள்ளனர் எனும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனால், சீனாவின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா எனப்படும் கொடூரமான வைரஸ் அந்த நாடு முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்குதல் அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் குறித்து முதலில் எச்சரித்த லீ வெண்லியாங் என்ற மருத்துவரும் கொரோனா வைரஸ் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது அந்நாட்டு மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் சீனாவில் நேற்று முன் தினம் வரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர் எண்ணிக்கை 722 ஆக அதிகரித்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 803 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பல உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் மக்களுக்குத் தடை வித்தித்தும் போக்குவரத்து சேவையை நிறுத்தியும் வருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களுக்கு இ-விசாவை தற்காலிகமாக நிறுத்துவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது சீனாவிலிருந்து வரும் வெளிநாட்டினர் இந்தியாவிற்குள் வர அனுமதி இல்லை என விமான போக்குவரத்துறை இயக்குநர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விமான போக்குவரத்துறை இயக்குநர் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில், விமானம் மற்றும் கப்பல் மூலம் சீனாவிலிருந்து வருபவர்கள் இந்தியாவுக்குள் நுழைய அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, நேபாளம், பூடான், வங்கதேசம், மியான்மர் எல்லைகள் வழியாகவும் இந்தியாவுக்குள் வர அனுமதியில்லை. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சீனாவிலிருந்து இந்தியா வரும் வெளிநாட்டினருக்கு அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”பா.ஜ.கவுக்கு 150 இடங்கள்கூட கிடைக்காது” : தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!
-
”தமிழ்நாடு முழுவதும் தடையில்லா சீரான மும்முனை மின்சாரம்” : தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
-
தமிழ்நாட்டுக்கு வந்த பீகார் கல்வித்துறை அதிகாரிகள் : தமிழக கல்வி முறையை பீகாரில் அமல்படுத்த திட்டம் !
-
“பிரதமர் மோடியின் பேச்சு தரங்கெட்டு இருக்கிறது” - வைகோ கடும் விமர்சனம் !
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!