India
காஷ்மீர் முன்னாள் முதல்வர் மகள் திடீர் கைது - வீட்டுக்காவலில் அடைக்கப்பட்டதால் பரபரப்பு!
காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக மாற்றி அமைத்தும் மத்திய அரசு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ம் தேதி அதிரடி நடவடிக்கை எடுத்தது. அதைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டுக்காவலிலும், விருந்தினர் மாளிகை காவலிலும் வைத்தது.
இந்த நிலையில் மெகபூபாவின் மகள் இல்திஜா முஃப்தி, நேற்று ஸ்ரீநகரில் நிருபர்களுடன் கலந்துரையாடவும், அனந்தநாக்கில் உள்ள தனது தாத்தாவும் மக்கள் ஜனநாயக கட்சியின் நிறுவனருமான முஃப்தி முகமது சயீத்தின் நினைவிடத்துக்கும் செல்லத் திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அதற்கு முன்பாகவே அவர் ஸ்ரீநகரில் உள்ள குப்கார் இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டு, வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
தொகுதி மறுவரையறை : திமிரெடுத்த பாஜகவை அடங்கியே ஆக வேண்டும்! - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
“தொகுதி மறுவரையறைக்கு எதிராக நாளை (ஏப்.16) கருப்புக்கொடிப் போராட்டம்!” : முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!
-
தொகுதி மறுவரையறை : வடக்கிற்கு ஆதாயம்... தெற்கிற்கு இழப்பு... தமிழ்நாடு சந்திக்கவிருக்கும் பேராபத்து என்ன?
-
“வேளாண்மையில் தாக்குதல் நடத்துவது பா.ஜ.க.வுக்கு புதிதல்ல!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
“தி.மு.க.வின் இன்னொரு முகத்தை நீங்கள் பார்க்க வேண்டி இருக்கும்!“: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!