India
ஃபாஸ்டேக்கில் தொடரும் குளறுபடிகள்: இருமுறை சுங்கக்கட்டணம் வசூலிப்பதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு!
டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிப்பதற்காக சுங்கச்சாவடிகளில் வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக சுங்கக்கட்டணம் செலுத்தும் வகையில் ஃபாஸ்டேக் முறையை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடிக்குள் நுழையும் போது தானாக வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடும். இதற்காக மணிக்கணக்கில் சுங்கச்சாவடியில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டது.
இந்த ஃபாஸ்டேக் முறை அறிமுகப்படுத்துவதற்கு முன்பே ஃபாஸ்டேக் அட்டை பற்றாக்குறைகள் இருந்ததால் மக்கள் மிகவும் அலைக்கழிக்கப்பட்டனர். தற்போது ஃபாஸ்டேக் அட்டை பெற்றிருந்தாலும் மக்கள் அவதியுறுகின்றனர்.
பெரும்பாலான சுங்கச்சாவடிகளில் தானாக பணம் எடுப்பதில் சிக்கல் ஏற்படுவதால், ரொக்கமாகவே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் கட்டணம் செலுத்தப்பட்ட பிறகு சுங்கச்சாவடியை விட்டு சிறிது தூரம் சென்றதும் வங்கிக்கணக்கில் இருந்து மீண்டும் பணம் எடுக்கப்படுகிறது.
இது போல இரண்டு முறையிலும் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் கடுமையாக இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதிலும் வணிக ரீதியிலான கனரக வாகனங்களே இந்த ஃபாஸ்டேக் குளறுபடியால் பாதிக்கப்படுகின்றனர்.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!