India
’குஜராத் கலவரம், அரச பயங்கரவாதத்தின் உச்சம்’ : முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் மகள் குற்றச்சாட்டு !
குஜராத் கலவரம் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்தபோது திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என அமெரிக்க காங்கிரஸ் விசாரணைக் குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டம் தொடர்பாக அமெரிக்க காங்கிரஸ் சார்பில் பொதுவிசாரணை நடைபெற்றது.
அதில், குஜராத் படுகொலைகள் தொடர்பாக தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டின் மகள் ஆகாஷி பட் பங்கேற்று சாட்சியம் அளித்துள்ளார்.
அப்போது, பேசிய அவர், “2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் வன்முறைகளின் போது அரசு அதிகார மையத்தின் ஒத்துழைப்போடு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
இது தொடர்பான விவரங்களை தெரிவித்த அப்போதைய குஜராத் மாநில அமைச்சர் ஹரேன் பாண்டியா மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் கலவரம் இந்தியாவின் கருப்பு அத்தியாயமாக உள்ளது.” என ஆகாஷி பட் தெரிவித்தார்.
Also Read
-
லஞ்சம் பெற்று அரசு வழக்கறிஞர் நியமனம்... தவெக அரசுக்கு எதிராக வழக்கு போட்ட தவெக வழக்கறிஞர் - விவரம்!
-
அண்ணா திராவிட கழகமாக மாறும் தமிழக வெற்றிக் கழகம்.. குதிரை பேரம் மூலம் கட்சிக்கு ஆள் சேர்க்கும் விஜய்?
-
விஜய்க்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு யோக்கியதை இருக்கிறது? - பட்டியலிட்டு பதிலடி கொடுத்த முரசொலி!
-
“ஒன்றிய அரசின் மிரட்டலுக்கு பயந்து IREL-க்கு அனுமதி அளித்த தவெக அரசு!” : திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின் கண்டனம்!
-
வெறும் வாய்ச்சவடால்தான்... 50 நாட்கள் ஆட்சியில் 5 ஆணவப் படுகொலைகள்... அச்சத்தில் மக்கள்!