India
உத்தரப்பிரதேசத்தில் தொடரும் அவலம் - 18 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தீவைப்பு!
இந்தியாவில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான் பாலியல் வன்முறை தொடர்ந்துவருகிறது. முக்கியமாக உத்தரப் பிரேதச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மோசமான சூழல் நிலவுகிறது.
அண்மையில், உத்தர பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நீதிமன்றம் சென்ற இளம்பெண்ணை ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் உத்தர பிரதேசம் மாநிலம் பதேபூர் பகுதியில் மற்றொரு இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து தீ வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பதேபூர் மாவட்டம் உனிப்பூர் கிராமத்தில் இளைஞர் ஒருவர் தனது வீட்டில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அப்பெண்ணின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அப்பெண்ணை மீட்டு மருத்துவமணைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், இளம்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். 90 சதவிகித தீக்காயங்களுடன் அந்தப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் தொடரும் இதுபோன்ற பாலியல் வண்கொடுமை சம்பவங்கள் மக்களிடையே மாநில அரசு மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா இந்துக் கோயிலா? - பரவும் வதந்திக்கு TN Fact Check விளக்கம்!
-
“எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?” - நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. கலாய்!
-
பா.ஜ.க-வின் Fake ID தான் அ.தி.மு.க : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கு!
-
புதிய மேம்பாலம் திறப்பு முதல் முதலீட்டாளர்கள் மாநாடு வரை... முதலமைச்சரால் விழாக் கோலமான மதுரை - விவரம்!
-
விழுப்புரம் ரூ.119.70 கோடி : 9,230 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!