India
பப்ஜி விளையாடிக்கொண்டே தண்ணீருக்கு பதிலாக ரசாயனத்தை குடித்த இளைஞர் பரிதாப பலி : ‘கேம்’ மோகத்தால் சோகம்!
மக்கள் மத்தியில் பிரபலமடையும் வீடியோ கேம்கள் அவ்வப்போது விபரீதத்தை ஏற்படுத்தவும் தவறுவதில்லை. முன்னதாக வந்த ப்ளூவேல் வீடியோ கேம் போன்று தற்போது இளைஞர்களை ஆட்கொண்டு வருகிறது ‘பப்ஜி’ மோகம்.
இவை வெறும் விளையாட்டுகளாக மட்டும் இல்லாமல் பல்வேறு உடல் உபாதைகளையும் ஏற்படுத்திவிடுகின்றன. சில சமயங்களில் உயிரையும் காவு வாங்கும் அளவுக்கு அபாயகரமானதாக உள்ளன இது போன்ற விளையாட்டுகள்.
அவ்வகையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நகைத் தொழில் செய்துவரும் சந்தோஷ் சர்மா மற்றும் சவுரப் யாதவ் என்ற இரு இளைஞர்கள் குவாலியரில் இருந்து ஆக்ராவுக்கு ரயிலில் சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது தீவிரமாக பப்ஜி விளையாடிக் கொண்டிருந்த சவுரப்புக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சுவாரஸ்யத்தில் தண்ணீருக்கு பதிலாக நகைகளை பாலிஷ் செய்வதற்காக வைத்திருந்த ரசாயணத்தை எடுத்து குடித்துள்ளார்.
அதை உணர்வதற்குள் நொடியில் மயக்கமடைந்துள்ளார் சவுரப். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார் சந்தோஷ் சர்மா. ஆக்ராவுக்கு முன்பு மொரெனா என்ற பகுதியை நெருங்கும்போது சவுரப் உயிரிழந்துவிட்டார். இந்தச் சம்பவம் ரயிலில் இருந்த பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக மும்பையைச் சேர்ந்த 18 வயதான இளைஞர் ஒருவர் பப்ஜி விளையாட பெற்றோர் அனுமதிக்காததால் தற்கொலை செய்துகொண்டார். தற்போது பப்ஜி மோகத்தால் தண்ணீருக்கு பதில் வேதிப்பொருளை குடித்த இளைஞரும் உயிரிழந்தது பேரதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்த இளைஞர்களின் மரணம், மொபைல் கேம்களுக்கு அடிமையாகியிருக்கும் மற்ற அனைவருக்கும் ஒரு பாடமாக அமையட்டும்.
Also Read
-
Sticker தொடங்கி ஸ்ரீவைகுண்டம் பாலியல் விவகாரம் வரை.. பேரவையில் விஜய் ஆட்சியை வறுத்தெடுத்த LoP உதயநிதி!
-
“தமிழ்நாட்டின் உரிமையை வலுவாக்கவே புதிய நடுவர் மன்றம்!” : தங்கம் தென்னரசு விளக்கம்!
-
மின்துறையை நடத்துவது எப்படி?: த.வெ.க அமைச்சருக்கு பேரவையில் பாடம் எடுத்த செந்தில் பாலாஜி, சிவசங்கர்!
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!