India
“டெல்டா பகுதியில் 15 இடங்களில் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கு ஒப்புதல்” - வைகோ கேள்விக்கு அமைச்சர் பதில்!
மாநிலங்களவையில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதிலளித்துள்ளார்.
காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம் எத்தனை ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்து இருக்கிறது? அதற்காக, மொத்தம் எத்தனை ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது?
அந்தக் கிணறுகளைத் தோண்டுவதற்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? அவ்வாறு தோண்டுகின்ற இடம், விளைநிலங்களா? அவ்வாறு இருந்தால், அதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன?
ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவது குறித்து மறு ஆய்வு செய்யப்படுமா? திட்டம் கைவிடப்படுமா? என்பது குறித்த கேள்விகளை எழுப்பினார் மாநிலங்களவை உறுப்பினர் வைகோ.
அதற்கு பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்துள்ள விளக்கத்தில், “காவிரி வடிநிலப் படுகையில், ஓஎன்ஜிசி நிறுவனம், 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்குத் திட்டம் வகுத்துள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர். 15 இடங்களுக்கு, சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
15 கிணறுகள், விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும், அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர்.
அந்தப் பிரச்னைகள் குறித்து, அதற்கு உரிய அதிகாரிகளிடம் கருத்துக் கேட்கப்படும்; சட்டங்கள், விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
”மோடியின் பொருளாதாரக் கொள்கை அடிமைத்தனத்திற்கான பாதை” : பரகல பிரபாகர் கடும் தாக்கு!
-
பா.ஜ.க ஆட்சியில் பெண்கள் மீது நடந்த கொடுமைகளை மறக்க முடியுமா? : அமித்ஷா கருத்துக்கு சித்தராமையா பதிலடி!
-
பாஜகவின் முகத்தை தொடர்ந்து கிழிக்கும் துருவ் ரதி - பட்டியலிட்டு அமைச்சர் மனோ தங்கராஜ் பாராட்டு !
-
இது தான் மோடி குடும்பமா? : குற்றவாளிகளை காப்பாற்றும் பா.ஜ.க.விற்கு குவியும் கண்டனங்கள்!
-
சந்திரசேகர் ராவ் அடுத்த 48 மணி நேரத்திற்கு பிரசாரம் செய்ய தடை - தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பின்னணி ?