India
சத்தீஸ்கரில் 5 பாதுகாப்புப் படை வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் - அதிர்ச்சி நிகழ்வு!
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த முகாமில் வீரர்களிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தன்னுடன் பணியாற்றும் சக வீரர்களை சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறித்து பாதுகாப்புப் படை தரப்பில் காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுப்பு வழங்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
- 
	    
	      ஒடிசா தேர்தல் முதல் ராமேஸ்வரம் கஃபே வரை.. “தமிழன் என்றால் அவ்வளவு கேவலமா?” -பட்டியலிட்டு RS பாரதி ஆவேசம்!
- 
	    
	      காலநிலை நடவடிக்கை கண்காணிப்பு & மாவட்ட கார்பன் நீக்கத் திட்டங்கள்... தமிழ்நாடு முன்னிலை!
- 
	    
	      “இவையெல்லாம் பீகார் மக்கள் தமிழ்நாட்டுக்கு அளித்த நற்சான்றிதழ்கள்” -பட்டியலிட்டு தயாநிதி மாறன் MP பதிலடி!
- 
	    
	      முதலமைச்சரிடம் உறுதியளித்த ஃபோர்டு நிறுவனம் - ரூ.3250 கோடி முதலீட்டில் புதிய ஒப்பந்தம் கையெழுத்து !
- 
	    
	      ஜெமிமா ரோட்ரிக்ஸ் : இந்துத்துவ அமைப்பினரால் விமர்சிக்கப்பட்டு, இன்று இந்தியாவே கொண்டாடும் சிங்கப்பெண் !