India
சத்தீஸ்கரில் 5 பாதுகாப்புப் படை வீரர்களை சுட்டுக்கொன்ற சக வீரர் - அதிர்ச்சி நிகழ்வு!
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த முகாமில் வீரர்களிடையே நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில், பாதுகாப்புப் படை வீரர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை 9 மணியளவில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒரு வீரர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து தன்னுடன் பணியாற்றும் சக வீரர்களை சரமாரியாக சுட்டுள்ளார்.
இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அதன் பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய வீரரும் சுட்டுக்கொல்லப்பட்டார்.
வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது குறித்து பாதுகாப்புப் படை தரப்பில் காரணம் எதுவும் கூறப்படவில்லை. இந்நிலையில், தாக்குதல் நடத்திய வீரர் தனக்கு விடுப்பு வழங்காததால் மன உளைச்சலில் இருந்ததாகவும், அதன் காரணமாகவே தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Also Read
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !
-
பெருங்கவிக்கோ வா.மு சேதுராமன் மறைவு : காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதலமைச்சர் உத்தரவு !
-
’உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் : ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
”தொப்பியும், பதக்கமும் கொடுத்தால் பிரதமர் மோடி எங்கும் செல்வார்” : மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!
-
”சினிமாவில் மறந்துபோய்கூட கடவுளிடம் கோரிக்கை வைக்காதவர் கலைஞர்” : எழுத்தாளர் இமையம்!