India
சர்ச்சை கருத்துகளைத் தவிர்க்க மக்களவையில் ‘நடத்தை விதிமுறைகள்’ - நெறிமுறைகள் குழு முடிவு!
2019ம் ஆண்டு பா.ஜ.க இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகான இரண்டாவது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் கடந்த வாரம் மக்களவையில் கோட்சே குறித்த பிரக்யா தாக்கூரின் கருத்து சர்ச்சையாகவே, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடுமையாக கண்டனங்களுக்குப் பிறகு பிரக்யா தாக்கூர் மன்னிப்புக் கோரினார்.
முன்னதாக, சமாஜ்வாடி எம்.பி., அஸம் கான் பா.ஜ.க எம்.பி., ரமாதேவி குறித்து பேசியது சர்ச்சையாகி பின்னர் மன்னிப்புக் கோரினார்.
மக்களவையில் முரண்பட்ட கருத்துகளை உறுப்பினர்கள் பேசுவதன் மூலம் பிரச்னை ஏற்பட்டு மன்னிப்பு கோரவேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள். இதனைத் தவிர்க்கும் விதமாக நடத்தை விதிமுறைகளை கொண்டு வர பா.ஜ.க மக்களவை உறுப்பினர் வினோத் குமார் தலைமையிலான நெறிமுறைகள் குழு விவாதித்திருப்பதாகவும், அதுகுறித்து மற்ற கட்சிகளின் கருத்துகளைக் கேட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
முன்னதாக மாநிலங்களவையில் நடத்தை விதிமுறைகள் கடந்த 2005ம் ஆண்டு முதல் பின்பற்றப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-சி.ஜீவா பாரதி
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!