India
“வேலையிழப்பும், வேலைவாய்ப்பின்மையும் பாஜக ஆட்சியில் தொற்றுநோயாக பரவுகிறது” - பிரியங்கா காந்தி சாடல்!
நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தலைவிரித்தாடுவதால் பல லட்சம் பேர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இதற்கு எதிராக பல எதிர்க்கட்சித் தலைவர்கள் பல்வேறு வகையில் குரலெழுப்பியும், குற்றஞ்சாட்டியும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். இருப்பினும், பாஜக அரசோ பொருளாதார மந்த நிலையே இந்தியாவில் ஏற்படவில்லை என்ற தொணியில் சமாளித்து வருகிறது.
இந்நிலையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை உருவாகி இருப்பது வளர்ச்சி எனும் சக்கரத்தை நிறுத்துவதற்கான அறிகுறியாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது பாஜக ஆட்சியில் ஒரு தொற்றுநோயை போல் உருவாகியுள்ளது என குற்றஞ்சாட்டிய அவர், கட்டுமானத் துறையில் மட்டும் 35 லட்சம் பேர் வேலையிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், மிகப்பெரிய ஐடி நிறுவனங்களும் 40 லட்சம் வேலை வாய்ப்புகளை முடிவுக்கு கொண்டுவர முயற்சித்து வருகிறது என்றும் பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !