India
தனியார் மயமாகிறது பாரத் பெட்ரோலியம் உட்பட 5 பொதுத்துறை நிறுவனங்கள் - மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "பாரத் பெட்ரோலியத்தில் 53.29 சதவிகித பங்குகளை விற்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறிப்பிட்ட நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் கூறினார்."
"அதில், இந்திய கப்பல் கார்ப்பரேஷனின் 63.75% பங்குகளும், அதன் நிர்வாகமும் தனியாருக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதெபோல், இந்திய கண்டெய்னர் கார்ப்பரேஷனின்30.8% பங்குகளும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளன."
"மேலும், THDC எனும் நீர்மின் உற்பத்தி நிறுவனத்தின் 74.23% பங்குகளும், வடகிழக்கு மின் உற்பத்தி கார்ப்பரேஷ் நிறுவனமான நிப்கோவின் 100% பங்குகளும் தனியாருக்கு விற்கப்படுவதாக குறிப்பிட்டார்."
ஏற்கெனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவரும் மோடி அரசு தற்போது பாரத் பெட்ரோலியமும் தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
பொருளாதார சரிவை சரிசெய்ய எந்த திட்டமும் வகுக்காமல் வழக்கம்போல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் வேளையில் மட்டுமே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், இந்த பாரத் பெட்ரோலியமும் அம்பானியின் வசம் செல்லவிருப்பதாகவும் முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“ரீல்ஸ் முதலமைச்சரே... அடக்குமுறைக்கு கழக இளைஞர்கள் அஞ்சமாட்டார்கள்!” : தி.மு.க இளைஞர் அணி கண்டனம்!
-
“முதல்வர் விஜய் பேச்சு ஆணவத்தின் உச்சம் ; அதிகாரத் திமிரின் வெளிப்பாடு” : கீதா ஜீவன் கடும் கண்டனம்!
-
“FIFA உலகக்கோப்பை.. யாரும் தொட முடியாத இரட்டை சாதனை.. மிரட்டும் ரொனால்டோ” : முழு விவரம் அறிக!
-
கோவையில் பரபரப்பு: பிரேக் பழுதடைந்த பேருந்து - 40 பேரின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர்!
-
“கழக இளைஞர்களை அச்சுறுத்தலாம் என நினைத்தால்.. வேடிக்கை பார்க்க மாட்டோம்” - உதயநிதி ஸ்டாலின் எச்சரிக்கை!