India
தென்பெண்ணையின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டத் தடையில்லை - உச்சநீதிமன்ற தீர்ப்பால் விவசாயிகள் அதிர்ச்சி!
கர்நாடகா மாநிலம் சென்னகேசவா மலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தியாகி 432 கி.மீ தூரம் பயணித்து கடலூர் அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இந்நிலையில், தென்பெண்ணை ஆற்றின் கிளைநதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, குடிநீர் தேவைக்காக அணைக்கட்டுவதாகவும், ஆற்றுநீர் தங்களுக்கு உரியது, தமிழகம் உரிமை கோர முடியாது என கர்நாடகா தெரிவித்தது.
தென்பெண்ணையில் அணை கட்ட தமிழகத்தின் ஒப்புதலை கர்நாடகா அரசு பெறவில்லை என்றும் நதிநீர் ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு செயல்பட்டதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணை கட்டத் தடையில்லை என தெரிவித்தது. மேலும், தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த தீர்ப்பு தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"கலைஞர் என் மேல் வைத்த அன்பை அவரின் மகன் ஸ்டாலினும் வைத்திருக்கிறார்" - இளையராஜா நெகிழ்ச்சி !
-
"இளையராஜா மொழிகளை, நாடுகளை, எல்லைகளைக் கடந்து, அனைத்து மக்களுக்குமானவர்" முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் !
-
"லட்சக்கணக்கான தமிழ் பொறியாளர்கள் உருவாக விதை போட்டது கலைஞர்" - துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம் !
-
”முதலமைச்சர் கொடுத்த Playlist” : இசைஞானி இளையராஜா பொன்விழாவில் கமல்ஹாசன் பேச்சு!
-
ரூ.295.26 கோடி மதிப்பீட்டில் 2,480 அடுக்குமாடி குடியிருப்புகள்! : துணை முதலமைச்சர் திறந்து வைத்தார்!