India
தொடரும் பொருளாதார மந்தநிலை : தொழில்துறை வளர்ச்சியில் 4.3% சரிவு - அம்பலப்படுத்திய NCAER ஆய்வறிக்கை!
பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி தொடர்ந்து 2வது மாதமாக வீழ்ச்சி அடைந்து வருவதாக National Council Of Applied Economic Research என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
NCAER வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 4.3 சதவிகிதம் பின்னடைவைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் பொருளாதார மந்தநிலை நீடிப்பதால் தொடர்ந்து 2வது மாதமாக சரிவைச் சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், முதலீட்டு தேவையை குறிக்கும் மூலதன பொருட்களின் வளர்ச்சி, 20.7% குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நுகர்வோர் சாதனங்கள் மற்றும் நுகர்வோர் சாராத சாதனங்கள் துறை ஆகியவற்றின் வளர்ச்சியிலும் சரிவு ஏற்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இருக்கையில் பா.ஜ.க அரசோ இன்றளவும், நாட்டில் எந்த பொருளாதார மந்தநிலையும் நிகழவே இல்லை என சமாளித்துக்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!