India
“மோடி ஆட்சியில் 20% வீழ்ச்சி; அடுத்த 6 மாதங்களுக்கு வாகன விற்பனை சரியும்” : மாருதி சுசூகி நிர்வாகி வேதனை!
பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற அக்டோபர் 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக கடந்த மாதம் அறிவித்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனாலும் தற்போது வரை நிலைமை சரியாகாததால் பெரும் தேக்கநிலையை அடைந்துள்ளது மாருதி சுசுகி. கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த முதல் பாதியில், மாருதி சுசூகியின் ஒட்டுமொத்த விற்பனை 25 சதவிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாத விற்பனையில் 4.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.
குறிப்பாக மாருதி சுசூகி கடந்த சில மாதங்களாகவே 1 லட்சத்திற்கும் குறைவான வாகனங்களை தான் விற்பனை செய்துவருவதாகவும் இதனால் நிறுவனத்தில் பங்குகள் 50 சதவித அளவிற்கு விழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாருதி தனது விற்பனை இலக்கை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மாருதி சுசூகியில் இந்தியாவின் தலைமை அதிகாரி ஆர்.சி.பார்கவா அங்கில நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய பார்கவா, “மாருதி சுசூகியின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளது உண்மைதான். எல்லா நிறுவனங்களுக்கும் இதே நிலைமைதான். கடந்த மாதம் பண்டிகை என்பதனால் ஓரளவு விற்பனையாகியுள்ளது.
மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் பி.எஸ் - 6 விதிகளினால் அடுத்து வரும் 5 - 6 மாதங்களுக்கு வளர்ச்சி மிகக் கடுமையாகத்தான் இருக்கும். மேலும் இந்தியாவின் பொருளாதார நிலைமையால் பெரிய மாற்றம் இருக்கும் என நினைத்தேன்.
ஆனால், 20 சதவிகித அளவிற்கு விழ்ச்சி அடையும் என நான் நம்பவில்லை. குறிப்பாக சிறு கார்களின் விற்பனை 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நிலவி வரும் மந்த நிலையால் மாருதி சுசூகி நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.” என்று பார்கவா கூறியுள்ளார்.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!