India
“மோடி ஆட்சியில் 20% வீழ்ச்சி; அடுத்த 6 மாதங்களுக்கு வாகன விற்பனை சரியும்” : மாருதி சுசூகி நிர்வாகி வேதனை!
பா.ஜ.க ஆட்சியில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற அக்டோபர் 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக கடந்த மாதம் அறிவித்தது. மேலும் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.
ஆனாலும் தற்போது வரை நிலைமை சரியாகாததால் பெரும் தேக்கநிலையை அடைந்துள்ளது மாருதி சுசுகி. கடந்த செப்டம்பர் காலாண்டுடன் முடிவடைந்த முதல் பாதியில், மாருதி சுசூகியின் ஒட்டுமொத்த விற்பனை 25 சதவிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்திருந்தது. இந்நிலையில் அக்டோபர் மாத விற்பனையில் 4.5 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது.
குறிப்பாக மாருதி சுசூகி கடந்த சில மாதங்களாகவே 1 லட்சத்திற்கும் குறைவான வாகனங்களை தான் விற்பனை செய்துவருவதாகவும் இதனால் நிறுவனத்தில் பங்குகள் 50 சதவித அளவிற்கு விழ்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மாருதி தனது விற்பனை இலக்கை குறைத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து மாருதி சுசூகியில் இந்தியாவின் தலைமை அதிகாரி ஆர்.சி.பார்கவா அங்கில நாளிதழக்கு பேட்டியளித்துள்ளார். அதில் பேசிய பார்கவா, “மாருதி சுசூகியின் விற்பனையில் வீழ்ச்சி அடைந்துள்ளது உண்மைதான். எல்லா நிறுவனங்களுக்கும் இதே நிலைமைதான். கடந்த மாதம் பண்டிகை என்பதனால் ஓரளவு விற்பனையாகியுள்ளது.
மேலும் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டிருக்கும் பி.எஸ் - 6 விதிகளினால் அடுத்து வரும் 5 - 6 மாதங்களுக்கு வளர்ச்சி மிகக் கடுமையாகத்தான் இருக்கும். மேலும் இந்தியாவின் பொருளாதார நிலைமையால் பெரிய மாற்றம் இருக்கும் என நினைத்தேன்.
ஆனால், 20 சதவிகித அளவிற்கு விழ்ச்சி அடையும் என நான் நம்பவில்லை. குறிப்பாக சிறு கார்களின் விற்பனை 53 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது. நிலவி வரும் மந்த நிலையால் மாருதி சுசூகி நிறுவனம் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.” என்று பார்கவா கூறியுள்ளார்.
Also Read
-
இந்தியாவிற்கு ஏற்பட்ட மற்றொரு தலைகுனிவு : சர்வதேச செய்தியான பிரஜ்வல் பாலியல் விவகாரம் - குவியும் கண்டனம்!
-
“ராகுல் காந்தியா? நரேந்திர மோடியா?” -பிரசார கூட்டத்தில் பாஜக நிர்வாகி கேள்விக்கு அதிரடி பதிலளித்த மக்கள்!
-
குடும்பத்தினருக்காக அரசாணை வெளியிட்டாரா EPS? அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு!
-
காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவரே கர்நாடக மாநிலத்தின் கருத்தை ஆதரிப்பதா? : வைகோ ஆவேசம்!
-
’பன்முகக் கலைஞர்’ : 10 ஆம் வகுப்பு தமிழ் பாடத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து பாடம்!