India
மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி: கூட்டணி கட்சியிடமே குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக?
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக சிவசேனாவில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவின் கூட்டணி ஆதரவு இல்லாமால் பாஜகவால் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனாவோ சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை அதிகரித்து வருகிறது. இதனால் அதிர்ந்து போன பாஜக தனது வழக்கமான நடவடிக்கையான குதிரை பேரத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை சீர்குலைத்து விலைக்கு வாங்கும் உத்தியை கூட்டணி கட்சியிடமே செயல்படுத்த முன்னெடுத்துள்ளது பாஜக. இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் நானே முதலமைச்சராக இருப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சியில் 2.5 ஆண்டுகள் சிவசேனாவுக்கு பங்கு கொடுப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவும் அமித்ஷாவும், உத்தவ் தாக்ரேவும் பேசியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பட்னாவிஸின் இந்த பேச்சு சிவசேனா கட்சியினரிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்ற சிக்கல் நீடித்து வருகிறது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!