India
மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி: கூட்டணி கட்சியிடமே குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக?
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக சிவசேனாவில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவின் கூட்டணி ஆதரவு இல்லாமால் பாஜகவால் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனாவோ சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை அதிகரித்து வருகிறது. இதனால் அதிர்ந்து போன பாஜக தனது வழக்கமான நடவடிக்கையான குதிரை பேரத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை சீர்குலைத்து விலைக்கு வாங்கும் உத்தியை கூட்டணி கட்சியிடமே செயல்படுத்த முன்னெடுத்துள்ளது பாஜக. இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் நானே முதலமைச்சராக இருப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சியில் 2.5 ஆண்டுகள் சிவசேனாவுக்கு பங்கு கொடுப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவும் அமித்ஷாவும், உத்தவ் தாக்ரேவும் பேசியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பட்னாவிஸின் இந்த பேச்சு சிவசேனா கட்சியினரிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்ற சிக்கல் நீடித்து வருகிறது.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!