India
மகாராஷ்டிராவில் நீடிக்கும் இழுபறி: கூட்டணி கட்சியிடமே குதிரை பேரத்தில் ஈடுபடும் பாஜக?
மகாராஷ்டிர மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்ட பாஜக சிவசேனாவில், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. சிவசேனாவின் கூட்டணி ஆதரவு இல்லாமால் பாஜகவால் அந்த மாநிலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சிவசேனாவோ சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவை அதிகரித்து வருகிறது. இதனால் அதிர்ந்து போன பாஜக தனது வழக்கமான நடவடிக்கையான குதிரை பேரத்தை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
எதிர்க்கட்சிகளை சீர்குலைத்து விலைக்கு வாங்கும் உத்தியை கூட்டணி கட்சியிடமே செயல்படுத்த முன்னெடுத்துள்ளது பாஜக. இதனிடையே அடுத்த 5 ஆண்டுகளுக்கு மகாராஷ்டிராவில் நானே முதலமைச்சராக இருப்பேன் என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.
மேலும், ஆட்சியில் 2.5 ஆண்டுகள் சிவசேனாவுக்கு பங்கு கொடுப்பது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை எனவும் அமித்ஷாவும், உத்தவ் தாக்ரேவும் பேசியது குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.
பட்னாவிஸின் இந்த பேச்சு சிவசேனா கட்சியினரிடையேயும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மகாராஷ்டிராவில் யார் ஆட்சி அமைப்பது என்ற சிக்கல் நீடித்து வருகிறது.
Also Read
-
அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் : தேர்வு குழுவினருக்கு பதிலடி கொடுத்த நடராஜன் !
-
ஆந்திராவில் பா.ஜ.க கூட்டணியில் பிளவு? : பிரதமர் மோடியின் பேச்சால் வந்த சிக்கல்!
-
உணவக உரிமையாளரை தாக்கிய பா.ஜ.க நிர்வாகி கைது : போலிஸ் அதிரடி
-
போலிஸ் பாதுகாப்பிற்கு ஆசைப்பட்டுப் பொய் புகார் : வசமாகச் சிக்கிய இந்து முன்னணி நிர்வாகி!
-
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!