India
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவசம் இல்லை : உள்ளாட்சி தேர்தல் நடத்த மீண்டும் அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மேலும் 4 வாரகாலம் அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு இல்லை என்பதால் தேர்தலை இப்போது நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இதனால், தேர்தல் அறிவிப்பை வெளியிட மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் முதல் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
“திருக்குறளை தேசிய நூலாக ஆக்க வேண்டும்!” : உலகப் பொதுமறையை பறைசாற்றிய முரசொலி தலையங்கம்!
-
மூலிகை அழகுசாதனப் பொருட்கள் & தோல் பராமரிப்புப் பொருட்கள் தயாரித்தல் பயிற்சி - விண்ணப்பிப்பது எப்படி?
-
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்.. சென்னையில் முகாம்கள் நடைபெறும் நாள், இடங்கள் என்ன?- முழு விவரம் உள்ளே!
-
கடலூர், சிதம்பரம் மக்கள் கவனத்துக்கு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்ன ?
-
துணை வேந்தர் விவகாரம்... ஆளுநரின் நியமனம் செல்லாது : மீண்டும் மீண்டும் கொட்டுவைத்த உயர்நீதிமன்றம் !