India
வாக்குப்பதிவு இயந்திரங்கள் கைவசம் இல்லை : உள்ளாட்சி தேர்தல் நடத்த மீண்டும் அவகாசம் கேட்ட தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் உள்ளாட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் கடந்த 2016-ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. எனினும் உள்ளாட்சி தேர்தலை தமிழக அரசு இதுவரை நடத்தவில்லை. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே.எஸ்.சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில், அக்டோபர் இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிப்பை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட மேலும் 4 வாரகாலம் அவகாசம் கோரி தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில், தேர்தல் நடத்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பு இல்லை என்பதால் தேர்தலை இப்போது நடத்த இயலாத சூழ்நிலை உள்ளது. இதனால், தேர்தல் அறிவிப்பை வெளியிட மேலும் 4 வார காலம் அவகாசம் வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் முதல் வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
இளம்பெண்களின் கவனத்திற்கு... விலையில்லா கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி.. எப்போது செலுத்தப்படும்?
-
“அங்கன்வாடிகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும்...” - திமுக எம்.பி. கிரிராஜன் வலியுறுத்தல்!
-
GSDP வளர்ச்சியில் 16% -தமிழ்நாடு Number One; அதுதான் திராவிட மாடல் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
விவசாயிகளின் நிவாரணம் - தமிழ்நாடு அரசின் கோரிக்கைக்கு பதில் என்ன? : வில்சன் MP கேள்வி!
-
மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது முடியும்? : நாடாளுமன்றத்தில் கதிர் ஆனந்த் எம்.பி கேள்வி!