India
‘தாராவி’ காங்கிரஸின் கோட்டை... மீண்டும் நிரூபித்த தேர்தல் முடிவுகள்!
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆளும் கட்சியான பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகளும், பா.ஜ.க அமைச்சருமான பங்கஜ் முண்டே தோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசியாவிலேயே அதிக குடிசைகள் அமைந்திருக்கும் பகுதியான மும்பை தாராவி பகுதியில் 1999 முதல் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றி வந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய தேர்தல் முடிவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று தாராவி ‘காங்கிரஸின் கோட்டை’ என்று நிரூபித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய தாராவி பகுதியில் 1999 முதல் 2019 வரை வர்ஷா கைக்வத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை காங்கிரஸின் வர்ஷா 53,954 வாக்குகளும், அனிதா தீபக் கௌதம் (பா.ஜ.க)- 42,093 வாக்குகளும் பெற்றனர்.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
+2 தேர்வு : எந்தெந்த மாவட்டங்கள் எத்தனை சதவீதம் தேர்ச்சி? - புள்ளி விவரங்களோடு பட்டியல் வெளியீடு !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு : தேர்ச்சி பெற்ற டாப் 3 மாவட்டங்கள் - பட்டியல் இதோ !
-
12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு - இந்த முறையும் மாணவிகளே சாதனை !
-
“அழிவை உருவாக்க துடிக்கும் பாஜக... சட்டத்தை மாற்ற நினைப்பவர்களை மக்கள் மாற்றுவார்கள்” : முரசொலி சூளுரை!
-
தேர்வு முடியும் முன்பே வெளியான தேர்வுத்தாள் : ராஜஸ்தான் நீட் தேர்வில் நடைபெற்ற மாபெரும் மோசடி !