India
‘தாராவி’ காங்கிரஸின் கோட்டை... மீண்டும் நிரூபித்த தேர்தல் முடிவுகள்!
மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ஆளும் கட்சியான பா.ஜ.க - சிவசேனா கூட்டணி அதிக தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் சூழல் ஏற்பட்டு இருக்கிறது.
காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 100 இடங்களைக் கைப்பற்றும் எனத் தெரிகிறது. முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேயின் மகளும், பா.ஜ.க அமைச்சருமான பங்கஜ் முண்டே தோல்வி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் ஆசியாவிலேயே அதிக குடிசைகள் அமைந்திருக்கும் பகுதியான மும்பை தாராவி பகுதியில் 1999 முதல் கடந்த சட்டமன்ற தேர்தல் வரை காங்கிரஸ் தொடர்ந்து வெற்றி பெற்றி வந்திருக்கிறது. இந்த நிலையில் தற்போதைய தேர்தல் முடிவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்று தாராவி ‘காங்கிரஸின் கோட்டை’ என்று நிரூபித்துள்ளது.
தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய தாராவி பகுதியில் 1999 முதல் 2019 வரை வர்ஷா கைக்வத் தொடர்ந்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை காங்கிரஸின் வர்ஷா 53,954 வாக்குகளும், அனிதா தீபக் கௌதம் (பா.ஜ.க)- 42,093 வாக்குகளும் பெற்றனர்.
- சி.ஜீவா பாரதி
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!