India
“எதிர்க்கட்சியை குறைகூறுவதை நிறுத்திவிட்டு, பொருளாதார வளர்ச்சிக்கான நடவடிக்கை எடுங்கள்” - மன்மோகன் சிங்!
இந்திய வங்கித் துறைகளில் மோசடி சம்பவம் அதிகரித்துவிட்டது. குறிப்பாக, கடன் பெற்று நாட்டைவிட்டுத் தப்பியோடுவதும் போலியான ஆவணங்களை கொண்டு கடன் பெற்று ஏமாற்றுவதும் வாடிக்கை நிகழ்வாகிவிட்டது. அண்மையில் கூட பஞ்சாப் - மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியான பி.எம்.வி வங்கியில் ரூ.2500 கோடி அளவிற்கு மோசடி நடந்திருப்பததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பா.ஜ.க அரசை நோக்கி, கேள்விகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் ஆட்சியில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போதுதான் வங்கித் துறை வீழ்ச்சியைச் சந்தித்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில், செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அதில், “2018-ம் ஆண்டில் இந்தியப் பொருளாதார மதிப்பு 2.7 லட்சம் கோடி டாலராகஇருந்தது. இதை 2024-ஆம் ஆண்டுக் குள் 5 லட்சம் கோடி டாலராக உயர்த்த இலக்கு வைத்துள்ளனர். ஆனால், அந்த இலக்கை அடைவதற்குக் குறைந்தது 10 முதல் 12 சதவிகித வருடாந்திர வளர்ச்சியை இந்தியா கொண்டிருக்க வேண்டும்.
மோடி அரசோ ஒவ்வொரு ஆண்டும் பொருளாதார வளர்ச்சியில், வீழ்ச்சியைத் தான் சந்தித்து வருகிறது. பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டும் என்றால் பிரச்சனை என்ன என்பதை சரியாக புரிந்து வைத்திருக்க வேண்டும்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடும் அறிவிப்புகளை பார்த்தால், பிரச்சனை என்ன என்பதே இந்த அரசுக்கு தெரியவில்லை என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எதிர்க்கட்சிகளை குற்றம்சாட்டுகிறார்களே, தவிர பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவில்லை. பிரச்சனைகள் என்னவென்றே தெரியாமல் இவர்களால் தீர்வு காணவும் முடியாது.
தற்போதைய அரசானது எதிர்க்கட்சியினர் மீதும் எதிராளிகள் மீதும் குறைகூறுவதை நிறுத்திவிட்டு, பொருளாதார வீழ்ச்சிக்கான காரணிகளைக் கண்டறிந்து வளர்ச்சிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!