India
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரது இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை நடத்தப்படும் என தகவல் வெளியானது.
இருப்பினும் நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, குளிர்கால கூட்டத்தொடரை எப்போது தொடங்குவது தொடர்பாக இன்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுத் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது. அப்போது, நவ.,18ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகத்திற்கும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் குளிர்கால கூட்டத்தொடர் குறித்து தகவல் அனுப்பப்பட்டது.
எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது குடியுரிமை திருத்த மசோதா, இ-சிகரெட் தடை, கார்ப்பரேட்டுகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட பல தொடர்பாக மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சிகள் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளன.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!