India
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவது எப்போது? : அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அவரது இல்லத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 24ம் தேதி வரை நடத்தப்படும் என தகவல் வெளியானது.
இருப்பினும் நடப்பு ஆண்டிற்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடர்பான அதிகாரப்பூர்வமாக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி, குளிர்கால கூட்டத்தொடரை எப்போது தொடங்குவது தொடர்பாக இன்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுத் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையில் கூடியது. அப்போது, நவ.,18ம் தேதி முதல் டிசம்பர் 18ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடர் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளின் செயலகத்திற்கும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சகம் குளிர்கால கூட்டத்தொடர் குறித்து தகவல் அனுப்பப்பட்டது.
எதிர்வரும் குளிர்கால கூட்டத்தொடரின் போது குடியுரிமை திருத்த மசோதா, இ-சிகரெட் தடை, கார்ப்பரேட்டுகளுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட பல தொடர்பாக மசோதாக்களை நிறைவேற்ற மோடி அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு புறமிருக்க, எதிர்க்கட்சிகள் தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான விவகாரத்தில் விவாதிக்க திட்டமிட்டுள்ளன.
Also Read
-
பழனிசாயின் புலம்பலை மக்கள் நிராகரிப்பார்கள்; 2026 தேர்தலிலும் படுதோல்விதான் : ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!
-
டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு செய்யப்பட்ட 476 பேருக்கு அரசுப் பணிக்கான நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
“எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
2,18,000 மெ.டன் கொள்ளளவிலான 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்களுக்கு அடிக்கல்! : முழு விவரம் உள்ளே!
-
ஓய்வு பெற்ற பத்திரிகையாளர்களுக்கு மாதம் ரூ.12,000 ஓய்வூதியம் : ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!