India
“டெங்கு காய்ச்சலுக்கு பாரசிட்டமால் சாப்பிட்டால் சரியாகிவிடுமாம்” : பா.ஜ.க முதல்வர் அலட்சிய பதில்!
உத்தரகாண்ட் மாநிலத் தில் சுமார் 4800 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. டேராடூனில் இதுவரை 3ஆயிரம் பேரும், ஹல்த்வானியில் 1,100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இவர்களில் டேராடூனில் 4 பேர், ஹல்த்வானியில் 2 பேர் என இறந்தும் போயிருக்கின்றனர். மாநில சுகாதாரத்துறை அறிக்கையிலேயே, செப்டம்பர் 17 வரை, 8 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொசுக்களால் பரவும் தொற்றுநோய் அதிகரித்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், பாராசிட்டமால் மருந்தினை 500 மில்லி கிராம் டோசேஜூக்குப் பதிலாக, 650 மில்லி கிராம் டோசேஜ் அளவில் உட்கொண்டு, சிறிது ஓய்வெடுத்தால் நோய் குணமாகி விடப் போகிறது” என்று திரிவேந்திர சிங் பேசியுள்ளார்.
முதல்வரின் இந்த பதிலைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மாநிலத்தின் முதல்வர் இதுபோல அலட்சியமாக பேசிவது எப்படி சரியாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!
-
3 ஆண்டுகள் - 6115 புத்தொழில் நிறுவனங்கள் : திராவிட மாடல் அரசின் மகத்தான சாதனை!