India
“டெங்கு காய்ச்சலுக்கு பாரசிட்டமால் சாப்பிட்டால் சரியாகிவிடுமாம்” : பா.ஜ.க முதல்வர் அலட்சிய பதில்!
உத்தரகாண்ட் மாநிலத் தில் சுமார் 4800 பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. டேராடூனில் இதுவரை 3ஆயிரம் பேரும், ஹல்த்வானியில் 1,100 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருப்பதை அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
மேலும், இவர்களில் டேராடூனில் 4 பேர், ஹல்த்வானியில் 2 பேர் என இறந்தும் போயிருக்கின்றனர். மாநில சுகாதாரத்துறை அறிக்கையிலேயே, செப்டம்பர் 17 வரை, 8 பேர் இறந்துள்ளதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் நேற்றைய தினம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது, உத்தரகாண்ட் மாநிலத்தில் கொசுக்களால் பரவும் தொற்றுநோய் அதிகரித்துள்ளதே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், பாராசிட்டமால் மருந்தினை 500 மில்லி கிராம் டோசேஜூக்குப் பதிலாக, 650 மில்லி கிராம் டோசேஜ் அளவில் உட்கொண்டு, சிறிது ஓய்வெடுத்தால் நோய் குணமாகி விடப் போகிறது” என்று திரிவேந்திர சிங் பேசியுள்ளார்.
முதல்வரின் இந்த பதிலைக் கேட்ட பத்திரிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் ஒரு மாநிலத்தின் முதல்வர் இதுபோல அலட்சியமாக பேசிவது எப்படி சரியாகும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?