India
அயோத்தி வழக்கின் வாதத்தை முடிக்க அக்டோபர் 18-ம் தேதி கடைசி கெடு - உச்ச நீதிமன்றம் கறார்!
அயோத்தி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
32வது நாளாக அயோத்தி வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீண்டும் உத்தரவிட்டார்.
ஏனெனில் அடுத்த சில நாட்களில் ஆயுதபூஜை பண்டிகைக்காக ஒரு வாரம் விடுமுறை வருவதையும், இன்னும் 10 நாட்களே வேலை நாட்களாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும் விரைந்து வாதிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
Also Read
-
”விவசாயிகளின் கண்ணீரை பற்றி கவலைப்படாத பிரதமர் மோடி” : செல்வப்பெருந்தகை ஆவேசம்!
-
சென்னையில் ரூ.89.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 584 குடியிருப்புகள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
”தமிழ்நாடு விவசாயிகளை வஞ்சித்துள்ள ஒன்றிய பா.ஜ.க அரசு” : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
”நெல் கொள்முதலில் தமிழ்நாடு அரசு சாதணை” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் சக்கரபாணி!
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக போடப்படும் தடைக்கற்களை தகர்த்தெறிவோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி