India
அயோத்தி வழக்கின் வாதத்தை முடிக்க அக்டோபர் 18-ம் தேதி கடைசி கெடு - உச்ச நீதிமன்றம் கறார்!
அயோத்தி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
32வது நாளாக அயோத்தி வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீண்டும் உத்தரவிட்டார்.
ஏனெனில் அடுத்த சில நாட்களில் ஆயுதபூஜை பண்டிகைக்காக ஒரு வாரம் விடுமுறை வருவதையும், இன்னும் 10 நாட்களே வேலை நாட்களாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும் விரைந்து வாதிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
Also Read
-
“முதலமைச்சர் விஜயிடம் நான் கேட்பது இதுதான்” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்!
-
“ஒன்றிய அரசின் அலட்சியம்.. கோவையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி தற்கொலை.. தொடரும் நீட் தேர்வு மரணம்”
-
“ஆழம் தெரியாமல் காலை விட்ட தவெக, முடியாததால் வெள்ளை அறிக்கை தருகிறதா?” : தங்கம் தென்னரசு சரமாரி கேள்வி!
-
“மரண ஓலம் விஜய் காதில் விழாவில்லையா? - என்ன செய்கிறது சிங்கப் பெண் படை?” : கொந்தளித்து சீறும் ‘முரசொலி’!
-
FIFA உலகக் கோப்பை: மெஸ்ஸி, எம்பாப்பே, ஹாலண்ட் அதிரடி; வெற்றியுடன் தொடங்கிய ஜாம்பவான்கள்!