India
அயோத்தி வழக்கின் வாதத்தை முடிக்க அக்டோபர் 18-ம் தேதி கடைசி கெடு - உச்ச நீதிமன்றம் கறார்!
அயோத்தி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
32வது நாளாக அயோத்தி வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீண்டும் உத்தரவிட்டார்.
ஏனெனில் அடுத்த சில நாட்களில் ஆயுதபூஜை பண்டிகைக்காக ஒரு வாரம் விடுமுறை வருவதையும், இன்னும் 10 நாட்களே வேலை நாட்களாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும் விரைந்து வாதிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!