India
அயோத்தி வழக்கின் வாதத்தை முடிக்க அக்டோபர் 18-ம் தேதி கடைசி கெடு - உச்ச நீதிமன்றம் கறார்!
அயோத்தி வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடிக்கவேண்டும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு மற்றும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக வழக்கை 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
32வது நாளாக அயோத்தி வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பான அனைத்து வாதங்களையும் அக்டோபர் 18ம் தேதிக்குள் கண்டிப்பாக முடித்துவிட வேண்டும் என வழக்கறிஞர்களுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீண்டும் உத்தரவிட்டார்.
ஏனெனில் அடுத்த சில நாட்களில் ஆயுதபூஜை பண்டிகைக்காக ஒரு வாரம் விடுமுறை வருவதையும், இன்னும் 10 நாட்களே வேலை நாட்களாக இருக்கும் என்பதை கருத்தில் கொண்டும் விரைந்து வாதிடுமாறு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.
Also Read
-
TARGET செய்யும் தவெக அரசு? : “Mental Torture பண்ணாதீங்க..” - கண்ணீருடன் VIDEO வெளியிட்ட மாணவர் பாரதிதாசன்
-
“தி.மு.க படிக்க வைக்கும்” : மாணவர் பாரதிதாசனுக்காக குரல் கொடுத்த மு.க.ஸ்டாலின்!
-
சமூகநீதி நாளில் சமூக அநீதி : மாணவர் பாரதிதாசனுக்கு நெருக்கடி தருவது கேவலத்தின் உச்சம் - உதயநிதி ஆவேசம்!
-
லண்டன் பயணம் : செய்தியாளர்களைச் சந்திக்காமல் சென்ற முதலமைச்சர் விஜய்!
-
மும்மொழி திட்டத்தைக் கைவிட வேண்டும் : ஒன்றிய அரசுக்கு, உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது என்ன?