India
கர்நாடகா : 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல்!
நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதற்கிடையில் கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
இந்த நிலையில், சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணைக்கு உட்பட்டுள்ள கர்நாடகாவின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது.
இதனையடுத்து, கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததால் வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?