India
கர்நாடகா : 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைப்பு - உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் ஒப்புதல்!
நாடு முழுவதும் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.
இதற்கிடையில் கர்நாடகாவில் 15 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அந்த 15 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.
இந்த நிலையில், சபாநாயகரின் தகுதி நீக்க உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, விசாரணைக்கு உட்பட்டுள்ள கர்நாடகாவின் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க முடியுமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதை அடுத்து தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்தது.
இதனையடுத்து, கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்ததால் வழக்கு மீதான விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Also Read
-
”திராவிட மாடல் ஆட்சியில் சிறப்பாக நடத்தப்படும் குடமுழுக்கு விழாக்கள்” : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
-
”நம் கரங்களை வலுப்படுத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : தேஜஸ்வி யாதவ் பேச்சு!
-
”குஜராத்தில் இருந்து ஆரம்பித்து இருக்கும் வாக்குத் திருட்டு” : ராகுல் காந்தி MP குற்றச்சாட்டு!
-
பசிப்பிணி மருத்துவராக காலை உணவின் கதிரவனாக உயர்ந்து நிற்கிறார் முதலமைச்சர் : முரசொலி!
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !