India
வீட்டை காலி செய்ய சந்திரபாபு நாயுடுவுக்கு கெடு; மீறினால் இடிக்கப்படும் - ஆந்திர அரசு அதிரடி!
கிருஷ்ணா நதி அருகே உள்ள வீட்டை ஒரு வாரத்திற்குள் காலி செய்யாவிடில், இடித்து அகற்றப்படும் என்று ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.
குண்டூர் மாவட்டம் உண்டவள்ளியில் கிருஷ்ணா நதி அருகே உள்ள தனியார் கெஸ்ட் ஹவுஸில் கடந்த 4 ஆண்டுகளாக சந்திரபாபு நாயுடு வசித்து வருகிறார்.
இந்நிலையில் சந்திரபாபு வசிக்கும் வீடு உட்பட அப்பகுதியில் கட்டப்பட்டுள்ள 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கிருஷ்ணா நதிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி ஆந்திர அரசு அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து அமராவதி தலைநகர் வளர்ச்சி ஆணையத்தின் அதிகாரிகள் சந்திரபாபு நாயுடுவின் வீடு உட்பட 30 குடியிருப்புகளையும் உடனடியாக காலிசெய்யுமாறு நோட்டீஸ் பிறப்பித்தனர். ஆனால் யாரும் காலி செய்யவில்லை.
இந்நிலையில் சந்திரபாபு வசிக்கும் வீட்டுக்குச் சென்ற அதிகாரிகள், ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்யவேண்டும் எனவும் தவறினால் கெடு முடிந்தவுடன் வீடு இடிக்கப்படும் எனவும் கூறி அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.
Also Read
-
த.வெ.க எம்.எல்.ஏ-வை முற்றுகையிட்ட மக்கள் : கொடுத்த வாக்குறுதி என்னாச்சு? - சரமாரி கேள்வி!
-
த.வெ.க அகராதியிலேயே.. : “மின்வெட்டே இல்லை” என பொய் சொல்லும் நிர்மல்குமாருக்கு தி.மு.க ஐடி விங் கண்டனம்!
-
“காவல்துறை, காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா?” : த.வெ.க.விற்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
“விஜய் போனது சக நடிகரை ஐஸ் வைக்கத்தானே தவிர முதலீடுகளை ஈர்ப்பதற்காக அல்ல!” : முரசொலி தலையங்கம்!
-
“வரலாற்றிலேயே இல்லாத டம்மி முதலமைச்சர்.. ஸ்டிக்கர் ஒட்டி பொய் பரப்புகின்றனர்” : உதயநிதி ஸ்டாலின் பேச்சு!