India
“உச்சநீதிமன்றம் எங்களுடையது; ராமர் கோவில் கட்டுவோம்” என்ற உ.பி அமைச்சருக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
அயோத்தி பாபர் மசூதி மற்றும் ராமர் கோவில் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு 22வது நாளாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக வாதாடும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், “எனக்கு மிரட்டல் வந்ததுள்ளது, நேற்று உச்சநீதிமன்ற வளாகத்தில் எனது உதவியாளர் தாக்கப்பட்டுள்ளார்” என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.
இதனைக் கேட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தது மட்டுமல்லாமல், இத்தகைய நிகழ்வுகள் ஏற்புடையது அல்ல. கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்தனர்.
இதற்கிடையில், “அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும், உச்சநீதிமன்றம் எங்களுடையது” உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் கூறியது தொடர்பான செய்திகளை அறிந்த நீதிபதிகள் அதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, இதுபோன்ற கருத்துகள் எந்த தரப்பில் இருந்து வந்தாலும் அதனை உச்சநீதிமன்றம் உற்று நோக்கி வருகிறது எனவும் கூறினர்.
Also Read
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?
-
“இன்றைய அதிமுக பற்றி அன்றைக்கே ஹைக்கூ கவிதையை கூறினார் இரகுமான் கான்” - துணை முதலமைச்சர் கிண்டல்!