India
இஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா!
நிலவின் மேற்பரப்பில், ஹாட் லேண்டிங் முறையில் தரையிறங்கியுள்ள சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பை பெரும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விக்ரம் லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ஹலோ என குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
இஸ்ரோவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், செப்.,20, 21 தேதிகளுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
மொகரம் பண்டிகை : 350 ஆண்டுகளாக தொடரும் இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் திருவிழா!
-
“எம்.எல்.ஏ சேர் எனக்குத்தான்.. உச்சமடைந்த த.வெ.க-வினரின் ரீல்ஸ் வெறி.. காற்றில் பறக்கும் விதிமுறைகள்”
-
ஏன் கீர்த்தனா பெயரை முதலில் போட்டீர்கள்? : அதிகாரிகளிடம் கடிந்து கொண்ட அமைச்சர் ஜெகதீஸ்வரி!
-
200 யூனிட்டு மின்சாரம் முதல் விஜய்யின் மூன்று பித்தலாட்டங்கள் : புட்டுப்புட்டு வைத்த முரசொலி!
-
“முதல்வரின் தவறான தகவலை சுட்டிக் காட்டியதற்கு ரெய்டா? ; மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்” : எ.வ.வேலு பேட்டி!