India
இஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா!
நிலவின் மேற்பரப்பில், ஹாட் லேண்டிங் முறையில் தரையிறங்கியுள்ள சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பை பெரும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விக்ரம் லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ஹலோ என குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
இஸ்ரோவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், செப்.,20, 21 தேதிகளுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!