India
இஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா!
நிலவின் மேற்பரப்பில், ஹாட் லேண்டிங் முறையில் தரையிறங்கியுள்ள சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பை பெரும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விக்ரம் லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ஹலோ என குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
இஸ்ரோவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், செப்.,20, 21 தேதிகளுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் ஒன்றும் இல்லை : நிர்மலா சீதாராமனுக்கு குறள் ஒன்றை நினைவூட்டிய முரசொலி!
-
ஏன்? எப்படி? என்ன? - மக்களவையில் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்த திமுக எம்.பி.-க்கள் - விவரம் உள்ளே!
-
பயோ மைனிங் முறை... சென்னை மாநகராட்சியில் 52.64 இலட்சம் மெட்ரிக் டன் திடக்கழிவுகள் அகற்றம்!
-
தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு: ரூ.22,794 கோடி முதலீடு..127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.. விவரம்
-
Budget2026 : “தேர்தல் நாடகத்தில் கூட தமிழ்நாடு என்றால் பாஜக புறக்கணிக்கிறது..” - அமைச்சர் ரகுபதி கண்டனம்!