India
இஸ்ரோவுக்கு உறுதுணை: லேண்டருக்கு ‘ஹலோ மெசேஜ்’ அனுப்பிய நாசா!
நிலவின் மேற்பரப்பில், ஹாட் லேண்டிங் முறையில் தரையிறங்கியுள்ள சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரில் இருந்து தகவல் தொடர்பை பெரும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இரவு, பகல் பாராமல் இதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் முனைப்புடன் பணியாற்றி வருகின்றனர். லேண்டருடன் இணைப்பை உருவாக்கும் முயற்சியில் இந்தியாவுக்கு துணையாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இறங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, விக்ரம் லேண்டருக்கு நாசா விஞ்ஞானிகள் ஹலோ என குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளனர். ரேடியோ அதிர்வெண்கள் மூலம் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ளும் முயற்சியில் நாசா ஈடுபட்டுள்ளது.
இஸ்ரோவின் ஒப்புதலுடன் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும், செப்.,20, 21 தேதிகளுக்குள் விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியும் எனவும் நாசா விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!
-
”மாநிலத்தின் வருவாயை கணிசமாக பாதிக்கும்” : GST கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியது என்ன?