India
INX மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிர்ப்பு - டெல்லி ஐகோர்ட்டில் ப.சிதம்பரம் மனு!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு எதிராகவும், வழக்கை ரத்து செய்யக் கோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த மாதம் 21ம் தேதி சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், 15 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்கப்பட்டார்.
விசாரணை முடிவடைந்ததை அடுத்து, செப்.,19ம் தேதி வரை ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்க டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில், சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் சார்பில் புதிதாக மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், வழக்கை ரத்து செய்யவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதற்கான மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை நாளை தாக்கல் செய்யவுள்ளது.
Also Read
-
”மின்னணு ஏற்றுமதியில் கொடி கட்டிப் பறக்கும் தமிழ்நாடு” : தினத் தந்தி நாளேடு பாராட்டு!
-
மே 7.. ‘முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்’ என்று ஒலித்த குரலால் மின்னும் தமிழ்நாடு - வீடியோ வைரல்!
-
நீலகிரி வரையாடு பாதுகாப்பு: வரலாற்று சிறப்புமிக்க முன்னோடித் திட்டம் -முதலமைச்சருக்கு The Print பாராட்டு!
-
“துள்ளி எழுந்த பள்ளிக்கல்வித்துறை.. இதுதான் மிகப்பெரிய சாதனை” - முரசொலி தலையங்கம் பாராட்டு!
-
விதிமீறல்களுக்கு பெயர்போன பா.ஜ.க! : நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம்!