India
“விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முடியவில்லை; ஆனால்...” : இஸ்ரோ அறிவிப்பு!
நிலவைப் பற்றி ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ கடந்த ஜூலை மாதம் விண்ணுக்கு அனுப்பியது. பல்வேறு வட்டப்பாதை நிலைகள் மாற்றப்பட்டு நிலவின் தென்துருவப் பகுதியில் நிலைகொள்ளச்செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆர்பிட்டரில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரை இறங்க முயன்றது.
நிலவில் இருந்து 2.1 கி.மீ தொலைவில் இருந்தபோது, விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோவுக்கும் இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இது விஞ்ஞானிகளுக்கும், நாட்டு மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
விக்ரம் லேண்டர் என்ன ஆனது எனத் தெரியாததால் அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியில், விஞ்ஞானிகள் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, நிலவைச் சுற்றி வரும் ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய புகைப்படம் மூலம் விக்ரம் லேண்டர் சேதமடையாமல் ஒரு பக்கமாக சாய்வாக இருப்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில், இன்று காலை இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தியில், “சந்திரயான் 2 ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் கண்டறியப்பட்டது. ஆனால், தற்போது வரை விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை ஏற்படுத்த முடியவில்ல. தொடர்ந்து, விக்ரம் லேண்டருடனான தகவல் தொடர்பை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“SIR படிவங்களை நிரப்பி, விரைந்து வழங்கிட வேண்டும்!” : வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்!
-
ரூ.38 கோடி : சமூகநீதி கல்லூரி மாணவர் விடுதி கட்டடங்கள் - அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
38 கிராமங்களின் பாசனப்பரப்பை காவிரி டெல்டா பகுதியாக அறிவித்த முதலமைச்சர்! : நன்றி தெரிவித்த உழவர்கள்!
-
குழந்தைகளின் நலனை பேணிக்காத்த நிறுவனங்கள் : விருதுகள் வழங்கி கவுரவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
இந்து சமய அறநிலையத் துறைக்கான புதிய திட்டப்பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!