India
ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு செப்.,15 முதல் தடை: மத்திய அமைச்சர் ராம்விலாஸ் அறிவிப்பு!
ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த செப்.,15 முதல் நாடுமுழுவதும் தடை விதிப்பதாக மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அறிவித்துள்ளது.
டெல்லியில், மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் உணவுத்துறையின் செயலாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உணவுத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ், பொதுத்துறையின் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடையை முழுமையாக அமல்படுத்தும் வகையில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக துணி மற்றும் சணல் மூலம் தயாரிக்கப்பட்ட பைகளை உணவுத்துறை அதிகாரிகளுக்கு வழங்கவும் அமைச்சர் பஸ்வான் உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
பி.எட். மாணாக்கர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தேதி நீட்டிப்பு... அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு !
-
”திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்” : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி அறிவுறுத்தல்!
-
பா.ஜ.கவின் கொத்தடிமையாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி : இரா.முத்தரசன் கடும் தாக்கு!
-
ஜானகி vs கேரளா ஸ்டேட்: முடிவுக்கு வந்த பிரச்சினை- தணிக்கை குழுவின் கோரிக்கை ஏற்பு- புதிய படத்தலைப்பு என்ன
-
“மாணவர்கள் கோட்சே வழியில் சென்று விடக்கூடாது” : கல்லூரி விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!