India
2 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்திய மாருதி சுசுகி நிறுவனம் : பொருளாதார மந்தநிலை உச்சகட்டம்!
கார் விற்பனை மந்த நிலையில் உள்ளதால், வருகிற 7 & 9 ஆகிய தேதிகளில் தனது தொழிற்சாலைகளை மூடுவதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்துள்ளது.
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் கார் உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதனால் அனைத்து முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றன.
இந்த நிலையில், இந்தியாவின் பிரபல கார் நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம், ஹரியானாவின் குருகிராம் மற்றும் மனேசரில் உள்ள தனது தொழிற்சாலைகளை வருகிற 7 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.
அன்றைய தினங்களுக்கு மட்டும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 4% சரிவைச் சந்தித்துள்ளதால் இந்த விடுமுறை அளிக்கப்படுவதாக மாருதி நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Also Read
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
’அழக்கூடாது’... கொளத்தூர் மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!
-
2026 சட்டமன்ற தேர்தல் : 11 ஆவது தோல்வி - 16 தொகுதிகளில் டெபாசிட் இழந்த அ.தி.மு.க!
-
“நெருப்பாற்றில் நீந்தி மீண்டெழுபவர் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்” : தி.க தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
-
“பிரெடரிக் ஏங்கல்ஸ் இல்லாவிட்டால் மார்க்சியம் உருவாகியிருக்குமா?” : கலைஞர் எழுதிய சுவாரஸ்ய கடிதம் !