India
ரூ.2000 நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த ஆர்.பி.ஐ முடிவு?
கடந்த கால மோடி ஆட்சியின் போது 2016-ம் ஆண்டு மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. இதனையடுத்து முன்னர் புழக்கத்திலிருந்த 1,000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.
பின்னர் புதிதாக 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை ஆர்.பி.ஐ அறிமுகப்படுத்தின. இந்த நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்றன. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் இருந்து வந்த 2000 ரூபாய் பணப்புழக்கம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது சுமார் 14, 400 கோடி அளவிற்கு பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதனை தொடர்ந்து ஆர்.பி.ஐ நடப்பு நிதியாண்டில் 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் 151 மில்லியன் அளவில் புழக்கத்தில் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை 47 மில்லியன் அளவாக குறைத்துள்ளது. அதே நேரத்தில் 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 11,692 மில்லியனாக உள்ளது.
Also Read
-
SIR : “அதிமுக - பாஜக களத்துக்கு வராதபோதுதான் சந்தேகமாக இருக்கிறது...“ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
235-க்கும் மேற்பட்ட உணவு வகைகள்... 4 நாட்களுக்கு... களைகட்டும் பெசன்ட் நகரில் உணவுத் திருவிழா!
-
இறந்த 4 மாதக் குழந்தையை 20 ரூ. பிளாஸ்டிக் பையில் கொண்டு சென்ற அவலம்.. ஜார்கண்ட் சோகத்தின் பின்னணி என்ன?
-
SIR மூலம் சுமார் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம்: “தமிழ்நாட்டை குறிவைத்துள்ள பாஜக” - திருமாவளவன் MP கண்டனம்!
-
மனித விலங்கு மோதல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை.. அதிநவீன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் திறப்பு!