India
பொருளாதார மந்தநிலையால் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும்: ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், நடப்பு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்தியா மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2019-20ம் நிதியாண்டு காலத்தில் 6.7 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் மக்களின் நுகர்வு திறன் குறைந்தது ஆகியவை பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிவு நிலை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
Also Read
-
சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை - காரணம் என்ன ?
-
தமிழ்நாட்டுக்கு பாராமுகம் காட்டினால்,தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்- தினகரன் தலையங்கம் எச்சரிக்கை!
-
முதலில் எய்ம்ஸ் அல்வா, இப்போது மெட்ரோ அல்வா: இது பாஜக தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதி- முரசொலி விமர்சனம்!
-
“தமிழ்நாட்டை பசுமை வழியில் அழைத்துச் செல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்!
-
10 ஆயிரம் வேலைவாய்ப்புகள் : ANSR நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!