India
பொருளாதார மந்தநிலையால் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும்: ஆய்வு நிறுவனம் எச்சரிக்கை!
இந்தியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர்.
இவ்வாறு இருக்கையில், நடப்பு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்தியா மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2019-20ம் நிதியாண்டு காலத்தில் 6.7 சதவிகிதமாக வளர்ச்சி விகிதம் குறையும் என குறிப்பிடப்பட்டுள்ளது. முதலீடுகளில் ஏற்பட்டுள்ள சரிவு மற்றும் மக்களின் நுகர்வு திறன் குறைந்தது ஆகியவை பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சரிவு நிலை, மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்நிறுவனம் எச்சரித்துள்ளது.
Also Read
-
”தமிழ்த்தாய் வாழ்த்திற்கு மூன்றாம் இடம்.. ஆளுநரின் அஜெண்டாவிற்கு தலையாட்டிய விஜய்” : முரசொலி விமர்சனம்!
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!