India
“30% பெண்கள்தான் பெண்மையோடு இருக்கிறார்கள்” : ஆடிட்டர் குருமூர்த்தி பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு!
பா.ஜ.க-வின் மறைமுக செய்தித் தொடர்பாளராகவே பேசி வரும் ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவ அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து ஒன்றை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆண்களை விட பெண்களே அதிக முக்கியத்துவத்தை அளிக்கின்றனர். ஆனால் பெண்கள் முன்பு போல் இல்லாததால் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்றார்.
மேலும், ஆங்கிலமும், நகர வாழ்க்கையும் நாட்டின் பாரம்பரிய கலாசாரத்தையே சீரழித்துக் கொண்டிருக்கிறது என்ற விஷயத்துக்கு வந்த குருமூர்த்தி, தற்போதைய காலகட்டத்தில் 30 சதவிகித பெண்களே பெண்மையுடன் இருக்கின்றனர். அவ்வாறு பெண்மையுடய பெண்களை மட்டுமே தெய்வமாகக் கருதுவதாகவும் பேசியுள்ளார்.
மேலைநாட்டுப் பெண்களைப் போன்று இந்திய பெண்களும் பெண்மையை இழந்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது என்ற குருமூர்த்தியின் இந்தப் பேச்சு பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
குருமூர்த்தி, பெண்களை இழிவாகப் பேசுவதாக குற்றஞ்சாட்டி பலர் இணையத்தில் கொதித்து வருகின்றனர். இந்த நிலையில், பெண்கள் குறித்த குருமூர்த்தியின் இந்த பேச்சுக்கு வன்மையாக கண்டனம் தெரிவித்தது மட்டுமல்லாமல், தனது கருத்தை குருமூர்த்தி வாபஸ் பெற வேண்டும் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆண்மையற்றவர்கள் என கடந்த 2017ம் ஆண்டு குருமூர்த்தி பேசியிருந்ததற்கு பெரும் எதிர்ப்பும், சர்ச்சையும் கிளம்பியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“பெண்கள் உயர்ந்து நடைபோட உரிமைத் தொகையும் உயரும்; உரிமையும் உயரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” மாபெரும் வெற்றிக் கொண்டாட்டம்
-
ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டம்! : எதிர்ப்புக்கு பணிந்த ஒன்றிய அரசு!
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!