India
பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிப் பெண்... ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் சாலையோரத்திலேயே பிரசவம்!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணிப் பெண் சாலையோரத்திலேயே குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் கமலா பாய் என்ற கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனை செல்வதற்காக ‘ஜனனி எக்ஸ்பிரஸ்’ ஆம்புலன்ஸுக்கு அழைத்துள்ளனர்.
ஆனால் வெகுநேரமாகியும் ஆம்புலன்ஸ் ஏதும் வரவில்லை. இதனால், அப்பெண்ணின் கணவர் இருசக்கர வாகனத்தில் வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடுத்துப் புறப்பட்டுள்ளனர். ஆனால் நடுவழியிலே அந்தப் பெண் தன் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
சாலையோரத்திலேயே பிரசவம் நடைபெற்று குழந்தை பெற்ற கமலா பாய், பின்னர் ஷாகாபூர் சமூக நலக்கூடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் தாய்க்கும், குழந்தைக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குழந்தையை பிரசவித்த பின்னர் உறவினர்கள் தாயையும், குழந்தையையும் அழைத்து வந்ததாகவும் இருவரும் நலமுடன் இருப்பதாகவும் அங்கு பணியிலிருக்கும் செவிலியர் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!