India
ஜெகன்மோகன் ரெட்டி என் வீட்டை மூழ்கடிக்க சதி செய்தார் - ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கோபம் !
ஆந்திர மாநிலத்தில் பெய்த கனமழையால் கிருஷ்ணா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து கிருஷ்ணா நதிக்கரையில் அருகில் வசித்து வந்த ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 39 பேரின் வீடுகளை காலி செய்யக்கூறி மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு தெலுங்கு தேசம் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், அணைகளில் இருந்து நீரை ஒரே நேரத்தில் வெளியேற்றி என் வீட்டை தண்ணீரில் மூழ்கடிக்க முயற்சி செய்தனர் என்று ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் பேசிய அவர், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அரசு என் வீட்டை வெள்ளத்தில் மூழ்கடிக்க முயற்சி செய்தது. ஆனால் என் வீடு மூழ்கவில்லை. இந்த வெள்ளப்பெருக்கு சாதாரணமாக ஏற்பட்டது அல்ல. அணைகளில் இருந்து தண்ணீரை முன்னதாகவே வெளியேற்றி இருந்தால் இந்த அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
என் வீட்டை மூழ்கடிக்க வேண்டும் என்பதற்காக அணைகளில் இருந்து தண்ணீரை ஒரே நேரத்தில் வெளியேற்றியுள்ளனர். வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வந்த நிலையில் அவர்களை கண்டுகொள்ளாமல் அமைச்சர்கள் என் வீட்டை சுற்றிவந்தபடி இருந்தனர் என சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளும்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டி அரசு மீது முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாக நடிகை ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பொய் அறிக்கை.. சாத்தான்குளமே சாட்சி.. மன்னிப்பு கேட்க வேண்டும்.. - பழனிசாமியை விளாசிய அமைச்சர் ரகுபதி!
-
Covid-ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடூரம்... சாத்தான்குளம் வழக்கில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு - விவரம்!
-
மேற்கிலும் உதிக்கும் சூரியன்! - அக்னி நியூஸ் சர்வீசஸ் வெளியிட்ட 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு!
-
”பா.ஜ.க.வின் பகிரங்க திட்டம்... நெருங்கும் ஆபத்து!” : முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி எச்சரிக்கை!
-
சென்னையில் சிக்கிய 10 ஏ.கே 47 துப்பாக்கிகள்... தேர்தல் பறக்கும் படை அதிரடி சோதனை! - முழு விவரம் உள்ளே!