India
தொடர் வீழ்ச்சியில் ஆட்டோமொபைல் துறை : தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடிய முன்னணி நிறுவனங்கள்!
இந்திய வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் உள்ள முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களுடைய தொழிற்சாலைகளைத் தற்காலிகமாக மூட திட்டமிட்டுள்ளன.
வாகன உதிரிபாகங்களை உற்பத்தி செய்வதில் இந்திய அளவில் முன்னணி நிறுவனமான சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் தொழிற்சாலை சென்னையை அடுத்த பாடியில் இயங்கி வருகிறது. வாகன சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி காரணமாக சுந்தரம் - கிளேட்டன் நிறுவனம் பாடியில் உள்ள ஆலையை இரண்டு நாட்களுக்கு மூடப்போவதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடியில் உள்ள தொழிற்சாலையில் ஆகஸ்டு 16 மற்றும் அகஸ்டு 17ம் தேதிகளில் எவ்வித உற்பத்தி நடவடிக்கைகள் நடைபெறாது. ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வியாபாரத்தில் மந்த நிலை காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்காலிக முடிவு தான் என்றாலும், ஒரு வேலை வியாபாரத்தில் மந்த நிலை தொடர்ந்தால் ஊழியர்களுக்கு வேலை போகும் அபாயமும் இருக்கும் என அச்சம் உருவாகியுள்ளது.
Also Read
-
"டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற நடராஜன் தகுதியானவர்"- ஜாம்பவான் வீரர் கருத்து !
-
கர்நாடகாவுக்கு 3498 கோடி, தமிழ்நாட்டுக்கு வெறும் 276 கோடி நிதி ஒதுக்கீடு - ஒன்றிய அரசை விமர்சித்த வைகோ !
-
பொதுத்தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் Fail : வெளிவந்த பாஜக ஆளும் ம.பி அரசுப் பள்ளியின் அவலம் !
-
பிரசார பாடலுக்கு தடை : ஆம் ஆத்மியை குறிவைக்கும் தேர்தல் ஆணையம் ? - குவியும் கண்டனம் !
-
"அமேதியில் ராகுலுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வேன்" - வயநாடு தொகுதி CPI வேட்பாளர் ஆனி ராஜா பேட்டி !