India
‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’’ திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடையாது - ராம்விலாஸ் பாஸ்வான்
நாடு முழுவதும் உள்ள எந்த நியாயவிலை கடையிலும் சென்று தங்களுக்குத் தேவையான பொருட்களை நுகர்வோர் வாங்கி கொள்ளும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். முதல் கட்டமாக குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய நான்கு மாநிலங்களில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது.
பின்னர் பேசிய ராம்விலாஸ் பாஸ்வான், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும். எனவே, ''ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு'' திட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க முடியாது.
அடுத்த ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் அனைத்து மாநிலங்களையும் திட்டத்தில் சேர்த்து தேசிய அளவில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி முதல் தேசிய அளவில் ''ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு'' திட்டம் செயல்படுத்தப்படும்” இவ்வாறு தெரிவித்தார்.
Also Read
-
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
-
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
-
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!
-
S.I.R-க்கு எதிராக தி.மு.க சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்! : முழு விவரம் உள்ளே!