India
மாநில அந்தஸ்தை இழந்து 2 யூனியன் பிரதேசமாக பிரிகிறது ஜம்மு காஷ்மீர் - லடாக்!
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவுகள் 370 மற்றும் 35ஏ நீக்கப்படும் என மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். இதனையடுத்து சட்டம் நீக்கப்படுவதற்கான அறிவிப்பு இப்போது முதலே அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அசையா சொத்துகளை வாங்க வழிவகுக்கும். இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்றும் அதில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையும் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் பிராந்தியம் சட்டப்பேரவை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து மத்திய அரசின் இந்த அறிவிப்பு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Also Read
-
சுயமரியாதைத் திருமண சட்டம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு தமிழ்நாட்டுக்கு பொருந்தாது- முன்னாள் நீதிபதி சந்துரு!
-
ஒரு நாள் ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன் : பாஜகவை விமர்சித்து அவர் கூறியது என்ன ?
-
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
"அவ்வளவுதான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கதை முடிந்து விட்டது" - இர்பான் பதான் கருத்து !
-
"விரைவில் நடராஜன் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" - SRH பயிற்சியாளர் நம்பிக்கை !