India
ஆர்.டி.ஐ ஆர்வலர் கொலை வழக்கில் பாஜக முன்னாள் எம்.பி-க்கு ஆயுள் தண்டனை: சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி!
குஜராத்தின் ஜூனாகத் மக்களவைத் தொகுதி எம்.பி.யாக இருந்தவர் டினு சோலங்கி. இவர்,ஜூனாகத் அருகே உள்ள ‘கிர்’ சிங்கங்கள் சரணாலயத்தில் சட்ட விரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனை, தகவல் அறியும் சட்ட ஆர்வலரான அமித்ஜேத்வா வெளியுலகிற்கு அம்பலப்படுத்தியதுடன், சோலங்கி மீது குஜராத் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையிலேயே, கடந்த2010-ஆம் ஆண்டு ஜூலை 20-ஆம் தேதி, அமித் ஜேத்வா, சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். குஜராத் உயர்நீதிமன்றம் முன்பாகவே இந்தபடுகொலை நடந்தது.
அப்போதும் கூட, ஜேத்வா படுகொலைக்கும், டினு சோலங்கிக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி, குஜராத் பா.ஜ.க அரசு அவரைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியது. ஆனால், உயர்நீதிமன்றம் இவ்வழக்கை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் சி.பி.ஐ ஜேத்வா படுகொலை பற்றி விசாரித்து வந்தது, பின்னர் எம்.பி. டினு சோலங்கி உட்பட 7 பேர் மீது 2016-ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரனையின் முடிவில், ஜேத்வாவை படுகொலை செய்ததாக டினு சோலங்கி உட்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி கே.எம். தாவே தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!