India
எஸ்.சி, எஸ்.டி மாணவர்களின் பட்டமேற்படிப்புக்கான நிதியை உயர்த்த வி.சி.க தலைவர்கள் கோரிக்கை!
நடந்து முடிந்த பட்ஜெட்டில் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களின் பட்டப்படிப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி கடந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டதைவிட 3,000 கோடி ரூபாய் குறைவாக உள்ளது. இதனால், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் பட்டப்படிப்பு மேற்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.
ஆகையால், நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர்களான திருமாவளவனும், ரவிக்குமாரும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கான பட்டப்படிப்புக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வலியுறுத்தினர்.
ஜன் தன் வங்கிக்கணக்குகள் மூலம் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு 5 ஆயிரம் கடன் பெறலாம் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதனை 50 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளையும் வலியுறுத்தியுள்ளனர்.
Also Read
-
இசைமுரசு நாகூர் இ.எம்.ஹனீபாவுக்கு நூற்றாண்டு நினைவு மலர்... வெளியிட்டார் துணை முதலமைச்சர் உதயநிதி!
-
கீழடி நம் தாய்மடி! பொருநை, தமிழரின் பெருமை! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
-
அறிவுசார் தலைநகராகத் திகழும் தமிழ்நாடு : திராவிட மாடல் அரசின் தொலைநோக்கு சிந்தனைக்கு எடுத்துக்காட்டு!
-
“தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் ஐயப்பாட்டை எழுப்புகிறது” : வைகோ அறிக்கை!
-
புத்தக காதலர்களே தயாராகுங்கள் : ஜன. 8 ஆம் தேதி சென்னை புத்தகக் கண்காட்சியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்!