India
பட்ஜெட் எதிரொலியால் வெகுவாகச் சரிந்த பங்குச்சந்தை : நிதியமைச்சகத்தின் தோல்வியா?
பட்ஜெட் அறிவிப்புகளால் இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை முதல் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட ஒரே நாளில் பங்கு மதிப்பு 2.2 லட்சம் கோடி சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர்.
புதிய பா.ஜ.க அரசு பொறுப்பேற்ற நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கடந்த ஜூலை 5-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலின்போது உயர்வுடன் காணப்பட்ட பங்குச் சந்தைகள் பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு கடும் சரிவைச் சந்தித்தன.
தங்கம், பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பங்குச்சந்தை வீழ்ந்தது. வார இறுதி விடுமுறைக்குப் பின்னர் பங்குச்சந்தை எழுச்சி பெறும் எனக் கருதப்பட்ட நிலையில், இன்றும் வர்த்தகம் சரிவுடன் காணப்படுகிறது.
இன்று பிற்பகல் நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவரைந்து 38,666 புள்ளிகளாக வீழ்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 268 புள்ளிகளுக்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்து 11,600 புள்ளிகளாக இருக்கிறது.
பா.ஜ.க அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் நாட்டைச் சீர்குலைத்து விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட கூடுதல் வரிகளால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததும் நிதி அமைச்சகத்தின் போதாமையாகவே பார்க்கப்படுகிறது.
Also Read
-
பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் திறப்பு! : முழு விவரம் உள்ளே!
-
“மேற்கிலும் தி.மு.க தான் Best! இந்த எழுச்சிதான் அதற்கு உதாரணம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடக்கம்... திமுக குழுவுடன் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் ஆலோசனை!
-
திராவிட மாடல் ஆட்சியில் இந்து அறநிலையத்துறையின் சாதனை... பட்டியலிட்டு தமிழ்நாடு அரசு பாராட்டு.. - விவரம்!
-
“எமர்ஜென்சியையே பார்த்த இயக்கம் திமுக; உங்களின் சித்து விளையாட்டிற்கு அஞ்சமாட்டோம்”: முதலமைச்சர் ஆவேசம்!