India
சமஸ்கிருத மொழி கற்றுக்கொடுக்க 5கிராமங்களை தத்தெடுப்பு? பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பாஜக
பா.ஜ.க மீண்டும் ஆட்சி பொறுப்பில் அடியெடுத்து வைத்ததில் இருந்து இந்துத்துவா கருத்துக்களை தீவிரமாக மக்கள் மத்தில் புகுத்துகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே ரேஷன் கடை, ஒரே நாடு ஒரே கல்வி கொள்கை போன்ற திட்டங்கள் இந்துத்துவா கொள்கையின் அடிப்படை ஆகும், மேலும் நாட்டின் பன்முகத்தன்மையை சீர்குலைக்கும் பெரும் முயற்சியை தொடர்ந்து செய்துகொண்டு வருகிறது என அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் சமஸ்கிருத மொழியை மக்களுக்கு கற்பிக்க 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் இயங்கிவரும் ராஷ்டிரிய சமஸ்கிருதம் சன்ஸ்தான், லால் பகதூர் சாஸ்திரி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் மற்றும் திருப்பதி ராஷ்டிரிய சமஸ் கிருத வித்யாபீடம் ஆகிய கல்வி நிறுவனங்கள் சமஸ்கிருத மொழியை கற்பித்து வருகின்றன. இந்த கல்வி நிறுவனங்கள் இரண்டு கிராமங்களை தத்தெடுத்து சமஸ்கிருத மொழியை கற்பிக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
இதனையடுத்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் கல்வி நிறுவனம் 5 கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று உத்தர விட்டுள்ளது. ராஷ்டிரிய சமஸ்கிருத சமஸ்தான் 5 கிராமங்களைத் தத்தெடுக்க ஒப்புக்கொண்டுள்ளது.
Also Read
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!
-
பத்திரிகையாளர்களுக்கு வீட்டுமனை மற்றும் ஓய்வூதிய உயர்வு! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
-
“உயிர்களை பலியிடும் அற்ப அரசியல்”: ரஜினிகாந்த் குறித்த ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரசிகர்கள் கடும் கண்டனம்!
-
28,639 பேருக்கு ரூ. 254.59 கோடி மதிப்பில் பிரம்மாண்ட அரசு நலத்திட்ட உதவிகள்: துணை முதலமைச்சர் வழங்கினார்!