India
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.3,800 கோடி மோசடி செய்த பூஷன் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம்!
பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட ரூ 3 ஆயிரத்து 800 கோடி கடன் திருப்பி செலுத்தப்படவில்லை என்று பஞ்சாப் நேஷனல் வங்கி ரிசர்வ் வங்கிக்கு அளித்த புகாரில் தெரிவித்துள்ளது.
பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் லிமிடெட் வங்கி நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், கூட்டமைப்பு வங்கிகளிடமிருந்து கடன் வாங்குவதற்காக அதன் கணக்கு புத்தகங்களில் மோசடியை கையாண்டதாகவும் பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. பூஷண் பவர் அண்ட் ஸ்டீல் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக முதல் குற்றப் பத்திரிகை பதிவு செய்யப்பட்டு சி.பி.ஐ விசாரணை தொடங்கியுள்ளது.
ஏற்கனவே வைர வியாபாரிகள் நீரவ் மோடிக்கும் மெஹூல் சோக்சிக்கும் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்து மோசடியில் சிக்கித் தவிக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு இது இரண்டாவது பலத்த அடியாக கருதப்படுகிறது.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!