India
நீரவ் மோடி குடும்பத்தினர் சொத்து முடக்கம் : சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு!
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19-ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிரான உலகளாவிய ஒடுக்குமுறையின் அடிப்படையில் சிங்கப்பூரில் உள்ள அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி மேத்தா மற்றும் மாயங்க் மேத்தா ஆகியோரின் 4 வங்கிக் கணக்குகள் மொத்தம் ரூபாய் 44 கோடி மதிப்புடைய வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று நீரவ் மோடிக்கு சொந்தமான 5 வங்கிக் கணக்குகளை சுவிஸ் அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
சிவப்பு+மஞ்சள் = காவி... - நீட் எதிர்ப்பு பயணத்துக்கு தடை விதித்த தவெக அரசுக்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
சமூகநீதிப் பிரச்சினையில் கை வைப்பது, சமூக விரோதச் செயலே : த.வெ.க அரசுக்கு கி.வீரமணி கடும் கண்டனம்!
-
தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
“முதுகெலும்பில்லா ஆட்சி தமிழ்நாட்டில் தொடர வேண்டுமா CM sir?” : அப்பாவு கடும் கண்டனம்!
-
குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையால் வந்த வினை : கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!