India
நீரவ் மோடி குடும்பத்தினர் சொத்து முடக்கம் : சிங்கப்பூர் நீதிமன்றம் உத்தரவு!
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றித் திரிவது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19-ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், நீரவ் மோடிக்கு எதிரான உலகளாவிய ஒடுக்குமுறையின் அடிப்படையில் சிங்கப்பூரில் உள்ள அவரது உறவினர்களின் வங்கிக் கணக்குகளை முடக்குவதாக அந்நாட்டு உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீரவ் மோடியின் சகோதரி பூர்வி மோடி மேத்தா மற்றும் மாயங்க் மேத்தா ஆகியோரின் 4 வங்கிக் கணக்குகள் மொத்தம் ரூபாய் 44 கோடி மதிப்புடைய வங்கி கணக்குகளை முடக்கியுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர், அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று நீரவ் மோடிக்கு சொந்தமான 5 வங்கிக் கணக்குகளை சுவிஸ் அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!