India
அரசு அதிகாரிகளுக்கு இனிமேல் பாதம்,பிஸ்தா தான் கொடுக்கணுமாம் : சுகாதாரத்துறை உத்தரவு !
அரசு அதிகாரிகள் பங்குபெறும் கூட்டங்களில், பிஸ்கட்களுக்கு பதிலாக உலர் பழங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்று மத்திய குடும்ப நல மற்றும் சுகாதார அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், “இனி மத்திய அரசு அதிகாரிகள் கூட்டங்களின் போது உடலுக்கு ஆரோக்கியமான உலர் பழங்கள், கடலை, பாதம், பேரீச்சம் பழம் போன்றவற்றை வழங்கலாம் என்றும் பிஸ்கட் வழங்குவதைத் தடை செய்ய உள்ளதாகவும்” தெரிவித்துள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்பவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு பாதாம், உலர்பழங்கள், பயிறுவகைகள் வழங்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!