India
புழக்கத்தில் உள்ள நாணயங்கள் குறித்து ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு!
சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி அதிக அளவில் பரவியது, இதனால் சிறு கடைகள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை 10 நாணயங்களை வாங்க மறுத்தனர். அதுமட்டுமின்றி அரசு பேருந்துகளில் பயணிகள் கொடுக்கும் 10 ரூபாய் நாணயங்களைத் தவிர்க்கச் சொல்லி, நடத்துநர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பிய திருப்பூர் போக்குவரத்துப் மண்டல மேலாளர் தனபால் தற்காலிக பணி நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மக்களும் 10 ரூபாய் நாயணங்களை வாங்க மறுத்து வருகின்றனர். இதையடுத்து அந்த நாணயங்கள் செல்லும் என்று ஆர்.பி.ஐ மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, "ஒவ்வொரு காலகட்டத்துக்கு ஏற்ப பொருளாதாரம் மற்றும் சில கருப்பொருளை மையமாக வைத்து நாணயங்கள் வெளியிடப்படுகின்றன. அந்த நாணயங்கள் நீண்டகாலம் புழக்கத்தில் இருக்கும்.
அதேநேரத்தில் புதிய உருவங்களிலும், புதிய வடிவங்களிலும் நாணயங்கள் வெளியிடப்படும். இதனால் சில நேரங்களில் நாணயங்கள் மீதான நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்பப்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் தாங்கள் பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் நாணயங்களை வாங்க மறுக்கிறார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
பொதுமக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்பவேண்டாம். புழக்கத்தில் உள்ள அனைத்து நாணயங்களும் சட்டப்படி செல்லும். எனவே, அதனை யாரும் வாங்க மறுக்க வேண்டாம்.
அதேபோல அனைத்து வங்கிகளும் நாணயங்களை மாற்றுவதற்கு வரும் பொதுமக்களை திருப்பி அனுப்பவேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!