India
காலியாகவிருக்கும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அ.தி.மு.க-வின் டி.ரத்தினவேல், டாக்டர் வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், டாக்டர் ஆர்.லட்சுமணன் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. தி.மு.க-வின் கனிமொழி, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது இடம் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் ஜூலை 24-ம் தேதியோடு காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 1-ம் தேதி துவங்கி ஜூலை 8-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை ஜூலை 11-ம் தேதி எனவும், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 11 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களுக்கு அதற்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அன்று மாலையே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 3 எம்.பி-களை போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.
Also Read
-
“மேகதாது அணை விவகாரம்.. ஏற்கப்பட்ட எதிர்க்கட்சி திருத்தம்.. தமிழ்நாடு ஒற்றுமையை காட்ட வேண்டும்”- முரசொலி!
-
முதலீடுகள் குறித்த திமுக மீதான விமர்சனம்.. - பொய்யை உடைத்து கீர்த்தனாவுக்கு TRB ராஜா கொடுத்த பதிலடி என்ன?
-
“முதலமைச்சர் கேட்கிறார்... சபாநாயகரும் ‘ஆ... Action’ என்கிறார்!” : உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்!
-
“ரீல்ஸ் ரெடி.. சட்டமன்றத்தை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர்” : உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி!
-
“குட்டிக்கதையா.. கணவனை தேடும் மனைவி கதை தமிழ்நாட்டுக்கே தெரியும்!” - உதயநிதி ஸ்டாலின் கடும் தாக்கு!