India
காலியாகவிருக்கும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அ.தி.மு.க-வின் டி.ரத்தினவேல், டாக்டர் வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், டாக்டர் ஆர்.லட்சுமணன் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. தி.மு.க-வின் கனிமொழி, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது இடம் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் ஜூலை 24-ம் தேதியோடு காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 1-ம் தேதி துவங்கி ஜூலை 8-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை ஜூலை 11-ம் தேதி எனவும், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 11 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களுக்கு அதற்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அன்று மாலையே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 3 எம்.பி-களை போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.
Also Read
-
“‘அமித்ஷாவே சரணம்’ என்று சரண்டர் ஆகிவிட்டார் பழனிசாமி!” : தமிழ்நாட்டு துரோகிகளுக்கு முதலமைச்சர் கண்டனம்!
-
“தலைமுறை தலைமுறையாக போராடி பெற்ற உரிமைகளை, நாமே பறிபோக அனுமதிக்கலாமா?” : கரூரில் முதலமைச்சர் எழுச்சியுரை!
-
“திராவிட முன்னேற்றக் கழகம் பிறந்தது; தமிழ்நாட்டிற்கான வழி திறந்தது!” : கனிமொழி எம்.பி திட்டவட்டம்!
-
”திமுக-வை எந்த கொம்பனாலும் தொட்டுக்கூட பார்க்க முடியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனல் பேச்சு!
-
தி.மு.க முப்பெரும் விழா : கனிமொழி MP-க்கு பெரியார் விருது வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!