India
காலியாகவிருக்கும் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, அ.தி.மு.க-வின் டி.ரத்தினவேல், டாக்டர் வி.மைத்ரேயன், கே.ஆர்.அர்ஜுனன், டாக்டர் ஆர்.லட்சுமணன் ஆகியோரின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியோடு நிறைவடைகிறது. தி.மு.க-வின் கனிமொழி, மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து அவரது இடம் காலியாக இருக்கிறது.
தமிழகத்தில் ஜூலை 24-ம் தேதியோடு காலியாகும் ஆறு மாநிலங்களவை எம்.பி பதவிக்கு ஜூலை 18-ம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூலை 1-ம் தேதி துவங்கி ஜூலை 8-ம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு பரிசீலனை ஜூலை 11-ம் தேதி எனவும், மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஜூலை 11 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 6 இடங்களுக்கு அதற்கும் மேற்பட்ட நபர்கள் போட்டியிடும் பட்சத்தில் ஜூலை 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வேரை வாக்குப்பதிவு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முடிவுகள் அன்று மாலையே தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவை உறுப்பினர்களை அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 3 எம்.பி-களை போட்டியின்றித் தேர்ந்தெடுக்க வாய்ப்பு உள்ளது.
Also Read
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!