India
ஆர்.எஸ்.எஸ்ஸை விமர்சித்த ராப் பாடகி மீது தேசத்துரோக வழக்கு!
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராப் பாடகி ஹர்ட் கவுர் மீது ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக பதிவுகளைப் பதிவிட்டதற்காக தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் பிறந்து பின் இங்கிலாந்து சென்று ராப் பாடகிய்யாகப் புகழ்பெற்ற ஹர்ட் கவுர் (தரண் கவுர் தில்லியன்) மீது உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பா.ஜ.க-வின் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் இணைந்து இந்த தேசத்துரோக வழக்கினை பதிவுசெய்துள்ளது.
39 வயதான ராப் பாடகி ஹர்ட் கவுர் கடந்த திங்கட்கிழமை இன்ஸ்டாகிராமில் போட்ட பதிவுகளுக்காக இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. வழக்கறிஞரும் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினருமான சஷாங்க் சேகர் ஹர்ட் கவுருக்கு எதிரான புகாரை தாக்கல் செய்தார்.
ஹர்ட் கவுர், குஜராத் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை குற்றவாளி எனவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பை வன்முறையைத் தூண்டும் தீவிரவாத அமைப்பு எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தை புல்வாமா உள்ளிட்ட தீவிரவாத சம்பவங்களில் தொடர்புடையவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேச துரோகத்தை உள்ளடக்கிய இந்திய தண்டனைச் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வாரணாசியில் ஹர்ட் கவுருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்கு சைபர் குற்ற விசாரணை பிரிவுக்கு அனுப்பப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!